Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - கால பைரவன்

கால பைரவன் - முகநூல் பதிவு (தேதி: ஆகஸ்டு 25, 2016 - நேரம்: 11.00 AM)

சு.ரா.வுக்கு ஈடான ஒரு பங்களிப்பை தமிழ் நவீன இலக்கியத்துக்கு செய்திருப்பவர் பிரம்மராஜன்.
-ஜீ.முருகன் தன் நிலைத்தகவலில்.
சுந்தர ராமசாமியுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு தமிழ் நவீன இலக்கியத்துக்கு பிரம்மராஜன் பெரியதாக எதுவும் செய்துவிடவில்லை ஜீ. முருகன்.
பி.கு. விசிலடிச்சான் குஞ்சுகள் என்னை குறிவைப்பதைவிட்டு கட்சிக்கு ஆட்கள் சேர்க்கும் பயனுள்ள வேலையை பார்க்கவும்.

ஓவியம்: ஆதிமூலம்

பின்னூட்டங்கள்:

Lakshmi Manivannan: உளறுவதற்கெல்லாம் விவஸ்தை கொஞ்சமும் தேவைப்படாது போலிருக்கிறது.நோயுற்றாலும் , பாடுற்றாலும் தங்கள் பொய்யில் தெளிவாக இருக்கிறார்போலுமே ஜி .முருகன் ? தவறில் ஒருநாளும் திருந்தார் தன்மையற்றோர்.பாவம்தான்.

கோணங்கி கல்குதிரைக்காக இவரிடம் ஒரு நேர்காணல் செய்த
ு வைத்திருந்தார் .படித்துப் பார்த்தேன்.சிறப்பாக இருந்தது அதற்குள் இப்படியொரு அத்தர் பல்ட்டியா?கடவுள் காப்பாற்றட்டும்.பிரம்மராஜனை படைப்பாளியாக கருதுபவர்களைப் பார்த்து உள்ளத்தில் சிரிக்கக் கூடியவர் சுந்தர ராமசாமி.அந்த சிரிப்பிற்கு பத்துப் பதினைந்து அர்த்தம் உண்டு.

சூரர்பதி: உண்மைதான்.பிரம்மராஜனுக்கு இணையான கவிதைகள் சுந்தரசாமி ஏதும் படைத்துவிடவில்ல.

Palani Vell: கால பைரவர் நீவிர் அன்பிரண்ட் செய்த பின்னும் ஒரு பின்னூட்டம் 
மணிவன்னா இலக்கிய மேதாவியே சுந்தர ராமசாமி ஒன்றும் கிழிக்கவில்லை உன்னை போன்ற உதாவாக்கறைகளுக்கு வழி செய்ததை தவிர
தில்லோடு நேர் விவாதம் செய்வோம் 


ஆமாம் கால பைரவரே காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றும்


எஸ்.செந்தில் குமார்: சுராவின் பங்களிப்பின் பகுதிகள் முக்கியத்துவமானது. பிரம்மராஜன் கவிஞர் என்கிற அளவில் தனது தீவரத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய கவிதைகள் பிரபல்யமாகதவையாக இருந்த போதிலும் தன்னை அவர் ஒரு கவிஞர் எ்னறு ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. சுரா உரைநடைக்காரர். அவருடைய நவீன கதை சொல்கிற உத்தியை பலரும் கையாண்டு வெற்றிகரமான சிறுகதையாளராக இருக்கிறார்கள். அவருடையகட்டுரை அவருடைய ரசனை சார்ந்த கட்டுரை அல்ல. பதிலாக ஒரு காலத்தின் மதிப்பீடு என்று சொல்லவேண்டும். காலச்சுவடு கண்ணன் என்பதல்லாம் தாண்டி சுரா என்கிற எழுத்தாளனை பின்வரும் யாருடனும் ஒப்பிடுவது முறையல்ல. சுரா பிரம்மராஜன் இரு தனித்தனி உலகங்கள். ஆளுமைகள்.

Peer Mohamed Syed Mohamed: கம்பனைவிட இளங்கோ
தமிழுக்குசுய வரலாறு காவியம் படைத்துள்ளார்.
ஒட்டக்கூத்தனே

இராமணியத்தை நிறைவு செய்தார். இப்படி ஒரு விவாதத்தை ஆரம்பித்து பொழுது போக்கலாமே? தமிழ் நாட்டு படைப்பாளர்களை நினைத்தால் பின்புறமாக சிரிக்கலாம் போல் இருக்கிறது. பிரம்மராஜனின் கவிதைக்கு 
ஈடாக சு.ரா கவிதை இல்லையென்று ஒருவர் நாதஸ்வரம் ...வாசிக்கிறார்.
சு.ரா வின் ஜே.ஜே சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை போல 
பிரம்மராஜன் ஒரு நாவலாவது எழுதியுள்ளாரா? இன்னொருவர் கேட்டால் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்.?
எதற்கு இந்த ஒப்பீடு? ஒரு திருவள்ளுவர் போலும் ஒரு கம்பனைப்போலும் இன்னொருவர் மேம்பட்டு வரலாம். ஆனால் அவரைப்போல நகல் எடுக்க
முடியுமா? எந்த வகையில் யாரோடு ஒப்பிடலாமென்று யோசிக்கலாமா? கீழ்ப்பாக்கம் என்று ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருப்பதாகக்
கேள்விபட்டுள்ளேன். அங்கே
தேடுவோமா?

No comments:

Post a Comment