Wednesday, October 10, 2012

மரங்களை வெட்டாதீர்

கிராமத்தில் இருக்கும் என்னுடைய அண்டை வீட்டார், எங்களுடைய அனுமதியின்று மரங்களை வெட்டுவதும் – பிளாஸ்டிக், மைக்கா, திரவ மற்றும் திடக் கழிவுகளைக் கொட்டி பின்புறக் கொள்ளையை நாசப்படுத்துவதும் என ஓயாது தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அதைப் பற்றிய சட்ட ஆலோசனைகளைக் கேட்க வேண்டி முகநூலில் என்னைத் தொடரும் நண்பர்களிடம் வினா எழுப்பி இருதேன். அதை அப்படியே இங்கு பகிர்கிறேன். யாருக்கேனும் உதவும் என்ற நம்பிக்கையில்...  

முகநூல் ஸ்டேட்டஸ் 




ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்த சட்ட மற்றும் அறவழி ஆலோசனைகளைச் சொல்லுங்கள்:

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)

விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டின் பின்புற காலி இடத்தில் சில மரங்கள் இருக்கிறது. அவற்றின் கிளைகள் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கிறது. மரங்களுக்குத் தெரியுமா? இவர்கள் வேண்டியவர்கள்! இவர்கள் வேண்டாதவர்கள் என...

நாங்களே மரத்தின் கிளைகளைக் கழிக்க வேண்டும் என்றிருந்தோம். ஆனால் பாருங்கள்... எங்களுடைய அனுமதியில்லாமல், நாங்கள் கவனிக்காத பொழுது எங்களுடைய மரத்தின் கிளைகளை வெட்டிக் கூளமாக அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதில் இன்னும் சில குட்டி மரக் கன்றுகள் அழிந்துள்ளன. அமைதியான முறையில் எடுத்துக் கூறியும் அவர்கள் அடங்குவதாக இல்லை. திமிர் தனத்துடன் “அப்படித்தான் செய்வோம்” என்று சொல்லாமல், சொல்லுகிறார்கள். 
கத்தியை எடுத்துக்கொண்டு வந்து, அவர்களின் உறவினர் ஒருவர் எங்களை ‘வெட்டுவேன், குத்துவேன்’ என்றபோதும் ஒரு புன்னகையுடன் தான் கடந்து சென்றேன். கோவத்தில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால், மரத்தின் கிளைகளை வெட்டி நாசப்படுத்தும் போது என்னால் பொருக்க முடியவில்லை. 
இது சார்ந்து சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என்றும் எனக்குத் தெரியவில்லை! நான் இல்லாத நேரத்தில் என்னுடைய தாயார் தனியாக வீட்டில் இருக்கிறார். நான் ஏதேனும் பேசப்போய், தனியாக இருக்கும் அவர்களை ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது!? அவர்களே உடல் நலம் இல்லாமல் பல நேரங்களில் மயங்கி கீழே விழுகிறார். 

அடுத்தவர்களின் வீட்டுக் காம்பவுண்ட் சுவரை இடிக்க வந்தால், திருட வந்தார்கள் என போலீசில் புகார் செய்யலாம். ஆனால் மரங்களை வெட்டினால் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை?
தொடர்ந்து மரங்களை வெட்டுவதும், கபளீகரம் செய்வதுமாக அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். இது எனக்கான பிரச்சனை மட்டுமல்ல. ஒவ்வொரு தெருவிலும் இதுபோன்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படிச் சமாளிப்பது.
மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக அறவழியில் நின்று, இது போன்ற சமூக விரோதிகளுடன் போராட முடியுமா? அதற்காகக் குழு ஏதேனும் இருக்கிறதா? என்பதைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும்.

சுற்றுச் சூழல் சார்ந்த இதுபோன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆக்டிவிஸ்ட், அரசியல்வாதிகள், நிருபர்கள் என பலருடைய கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். இலக்கியம் வாசித்து, இதயத்தில் அன்பை வழியவிடும் என்போன்றவர்கள் இவர்கள் மிகவும் சோதிக்கிறார்கள்.

ஆகவே, ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்.

அதற்குக் கிடைத்த பின்னூட்டங்கள்: 

விமர்சகர் ஞாநி: உங்கள் வீட்டு மரத்தை உங்கள் அனுமதி இல்லாமல் வெட்டினாலும் போலீசில் புகார் செய்யலாம்.


மௌலி: போலிசில் புகார் தாருங்கள், இன்றை தேதி போலிசுக்குப் பக்கத்து வீட்டுக்காரரே மேல் என்ற எண்ணம் வந்துவிடும்

பிரகாஷ் ராஜகோபால்: சொந்த வீடாக இருந்தால், போலிசுக்குப் போவதை விட பேசித் தீர்ப்பதே சிறந்தது.இரு வீட்டுக் காரர்களும் பெரிதும் மதிக்கும் சான்றோர் / பெரியவர் ஒருவரை அழைத்து வந்து மத்யஸ்தம் செய்ய முயற்சிக்கலாம்.(பக்கச் சார்பற்ற உங்களின் நியாயத்தை அவர்களுக்குப் புரியவைக்க). பல பத்தாண்டுகள் தொடர்ந்து வாழப் போகும் இடத்தில், நட்பு பாராட்டாவிடினும், பகைமை உணர்வு தொடர்ந்து கொண்டே போவதைத் தவிர்க்கலாம்.

சுரேஷ் கண்ணன்: காவல் துறையில் புகார் அளிக்கும் முன் அவர்கள் வீட்டுப் பெரியவர்களை அணுகி உரையாடுவது நல்லது என்று தோன்றுகிறது.

Sa Na கண்ணன்: வர்கள் செய்வது தவறுதான். ஆனால், உங்கள் வீட்டு மரக்கிளை அவர்கள் வீட்டுப் பக்கம் செல்வதால் நிச்சயம் இலைகள் கீழே விழுந்து குப்பை உருவாகியிருக்கலாம். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை எனும்போது நீங்கள் அவர்களுக்கு ஏற்றமாதிரி மாறுவதுதான் நிம்மதியைக் கொடுக்கும். அவர்கள் வீட்டுப் பக்கம் கிளைகள் எதுவும் போகாமல் பார்த்துக்கொண்டால் பிரச்னை தீரும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர் ஞாநி:  //பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)// இதுதான் கிருஷ்ணபிரபு மற்றும் அவர் குடும்பத்தாரின் மனநிலை. இவர்களுக்கு பொது மனிதர், சான்றோர், பெரியவர்கள் எதுவும் உதவமுடியாது. போலீஸ்தான் சரி.

முத்துச்சாமி பழனியப்பன்: நீங்களே ஒரு ஆள் பிடித்து அவர்கள் வீட்டுப் பக்கமாகப் போகும் மரக் கிளைகளை வெட்டி விடுங்கள், மரத்திற்கு எந்தப் பக்கம் வளர வேண்டும் என அவர்களுக்கும் தெரியாது தான், சண்டைக்கு இழுக்க வேண்டும் என முடிவான பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள், தயவு செய்து போலிசுக்கு போகவே வேண்டாம், சாட்சிக்காரன் கால்ல விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல், முடிந்தால் பெரிய கயிறு வாங்கி மரத்தை உங்கள் வீட்டுப் பக்கமாக இழுத்துக் கட்டுங்கள், பெரிய மரமாக இருந்தால் வளையாது தான், ஆனால் இது அந்த முட்டாள்களுக்கு புரியாது, நாம சொல்றத கேட்கிறார்கள் என்ற நினைப்பு வந்து விடும், கிட்டத்தட்ட சின்னப் பசங்களை ஏமாத்துற டெக்னிக் தான் இது, அப்புறமா பக்கத்துக்கு வீட்டுகாரங்ககிட்ட சும்மா கூட ஒரு வாய்ப்பேச்சு இல்லாம இருந்தா இப்படியெல்லாம் வரத் தான் செய்யும்..யாராவது பேச முயற்சி பண்ணனும், எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல


கிருஷ்ணபிரபு: நண்பர்களே பின்னூட்டத்திற்கு நன்றி.

என்னுடைய அண்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கிறார். “போலீஸ், நீதிமன்றம்” என்று செல்வதில் எனக்குப் பிரச்சனையே இல்லை. 
என்னுடைய எண்ணம் என்னவெனில், செய்த தவறை அண்டை வீட்டார் உணர வேண்டும். அதற்காக மண்டையைக் குத்திக் கொண்டு யோசித்தேன்.

பின்புறத்தில் இருக்கும் சிறிய தோட்டத்திற்கு “சிரிடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்ட இருக்கிறேன். அவர்கள் குப்பையைக் கொட்டும் இடத்தை ஆட்களை வைத்துச் சுத்தம் செய்து, அந்த இடத்தில் சினிமா போஸ்டர் போன்ற பெரிய சைஸ் ‘சிரிடி பாபா’வின் ஆளுயர போஸ்டரை நட்டு வைக்க இருக்கிறேன். 
அதைப் பற்றிய பதிவினை விரைவில் வலையேற்றுகிறேன்.

# போலீஸ், கேஸ் என்று போனாலும் அதே செலவுதானே.  

No comments:

Post a Comment