Saturday, September 24, 2011

நாடகக் கலை விழா 2011 - புரிசை

“புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்” மற்றும் “தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர்” இணைந்து வழங்கும் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நூற்றாண்டு விழா, எட்டாம் ஆண்டு நினைவு நாடகக் கலை விழா – 2011, கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மறைந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் உருவப்படத் திறப்பு விழா


நாள்: 01, 02, 03 - அக்டோபர் 2011
இடம்: கண்ணப்பத் தம்பிரான் அரங்கம், புரிசை கிராமம், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

அன்புடையீர்,

வணக்கம், வருகிற 2011 அக்டோபர் 01, 02, 03 தேதிகளில் புரிசையில் நாடகக் கலைவிழா நாள்தோறும் இரவு 7.30 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை வரை சிறப்புடன் நடைபெறவுள்ளது.

பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்தலைவர், நிர்த்யோதையா பரதர் – இளங்கோ ஆசிய கலாச்சார மையம்,

பத்மஸ்ரீ தோட்டாதரணி கலை இயக்குனர்,

திரு சதானந்த மேனன் - “ஸ்பேசாஸ்” சென்னை – கலை விமர்சகர், நிழற்படக் கலைஞர்,

திரு நா முத்துசாமி நிறுவனர், கூத்துப்பட்டறை சென்னை,

திரு ச தமிழ்ச்செல்வன் - தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,

பேராசிரியர் செ. ரவீந்திரன் - மேனாள் துறைத் தலைவர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறை, தில்லி பல்கலைக் கழகம்,

பேராசிரியர் மு ராமசாமி - நாடகத் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,

யதார்த்தா கி போன்னேச்வரன்ஆசிரியர், வடக்கு வாசல், புது தில்லி,

கவிஞர் ஆரிசான் - செயலர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், திருவண்ணாமலை மாவட்டம்,

R லட்சுமணன்ஊராட்சி மன்றத் தலைவர் புரிசை,

R. லோகநாதன் தாளாளர், செய்யாறு ஐ. டி. ஐ,

ஆகியோர் வருகைத் தர இசைந்துள்ளனர். இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு...

கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் – தலைவர்.
கண்ணப்ப காசி – செயலர்.
[புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம்]

முதல் நாள் நிகழ்வு – 01-10-2011

இரவு 7.30 மணி: மங்கள இசை

இரவு 7.45 மணி: கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் திருவுருவச் சிலை திறப்பு, திறப்பாளர்: பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்

இரவு 8.15 மணி: புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி மாணவர்கள் வழங்கும் “வீர விளையாட்டு” பயிற்சியாளர்கள் திரு. 'சென்செய்' மா. சம்பத்குமார் & ஏழுமலை, புரிசை அரசு பள்ளி மாணவர்கள் வழங்கும் “கலை நிகழ்ச்சி” – பயிர்த்சியாளர்கள் செல்வி அகிலா மற்றும் செல்வி கௌரி

இரவு 8.45 மணி: “விழா சிறப்புரை” – திரு சதானந்த மேனன் “கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்குதல்...
விருது பெறுபவர்: திரு முருகன் ராவ், மதுரை தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்,
விருது வழங்குபவர்: பேரா மு. ராமசாமி

காப்ரியல் கார்சியா மார்க்வெசின் “பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்” தெருக்கூத்துப் பனுவல் வெளியீட்டு விழா
ஆசிரியர்: கலைமாமணி கண்ணப்ப தம்பிரான்
புத்தகம் வெளியிடுபவர்: பத்மஸ்ரீ தோட்டா தாரணி
புத்தகம் பெற்றுக் கொள்பவர்: பேரா செ. ரவீந்திரன், திரு போன்னேஷ்வரன்,

”மறைந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் திரு உருவத் திறப்பு”
திறப்பாளர் நா முத்துசாமி

இரவு 9.30 மணி: கலாக்ஷேற்ற சென்னை வழங்கும் கண்ணப்பர் குறவஞ்சி நாட்டிய நாடகம், இயக்கம் - ருக்மணி அருண்டேல், இசையமைப்பு பாபநாசம் சிவன்

இரவு 11.00 மணி: வைகறைக் கலைக்குழு, திருவண்ணாமலை வழங்கும் “கிராமிய இசை”

இரவு 11.30 மணி: “மூன்றாம் அரங்கு” சென்னை வழங்கும் பாதல் சர்க்காரின் “ஸ்பர்டகஸ்” – நாடகம், இயக்கம் பேரா மு ராமசாமி

அதிகாலை 1.30 மணி: புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் வழங்கும் “இந்திரஜித் தெருகூத்து”, ஆசிரியர்: கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன்

இரண்டாம் நாள் நிகழ்வு – 02-10-2011

பிற்பகல் 3.00 மணி: “இயற்கை விவசாயம்” – சிறப்பு சொற்பொழிவு: திருமிகு பாமயன் – செயலர், தாளாண்மை உழவர் இயக்கம். திரு: ராமசுப்ரமணியன் – சமன்வையா, சென்னை. திரு பாலாஜி சங்கர், தற்சார்பு இயக்கத்தின் “கத்திரிக்கா” குறும்படம் திரையிடல்.

இரவு 8.00 மணி: “துடும்பாட்டம்” – சேரன் துடும்பாட்டக்குழு, காரமடை, கோவை.

இரவு 8.30 மணி: “தமிழிசை” – செல்வி அகிலா & செல்வி கௌரி

இரவு 9.15 மணி: கலா அரங்கம், கேரளா வழங்கும் “கிரதம்” கதகளி நடன நிகழ்ச்சி, குழுத் தலைவர்: கலா அரங்கம் பிசு லால்

இரவு 11.15 மணி: “வாலி வதம்” – இராமாயண தோற்பாவை நிழற்க்கூத்து, நிகழ்த்துபவர்: முருகன் ராவ், மதுரை.

அதிகாலை 12.15 மணி: “கட்டியக்காரி”, சென்னை வழங்கும் “கருக்கு” எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவம். “மொளகாப்போடி” – நாடகம், இயக்கம் – ஸ்ரீஜித் சுந்தரம்.

அதிகாலை 01.15 மணி: எலிமேடு வடிவேல் கலைமகள் நாடக சபா, கட்ட பெட்டி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் வழங்கும் “மதுரை வீரன்” – தெருக்கூத்து, ஆசிரியர்: ஹரிஹரன்.

மூன்றாம் நாள் நிகழ்வு – 03-10-2011

இரவு 8.00 மணி: ஆரணி “ராஜ நிலா” பிரகாஷ் வழங்கும் “மேற்கத்திய இசை நிகழ்ச்சி – டிரம்ஸ்”

இரவு 8.30 மணி: “கண்ணப்ப தம்பிரான் – ஆவணப்படம்” – இயக்கம்: பென்னேஸ்வரன், யதார்த்தா, புது தில்லி.

விழா சிறப்புரை: ச. தமிழ்செல்வன் - தலைவர் த.மு.எ.க.ச தமிழ்நாடு

இரவு 9.30 மணி: ஜனகரளியா, மக்கள் களரி, இலங்கை வழங்கும் “சரண்தாஸ்” – தமிழ் நாடகம், இயக்கம்: பராக்ரம நீரியல

இரவு 11.30 மணி: சப்தார் ஹஸ்மி கலைக்குழு, புதுச்சேரி வழங்கும் “கிராமிய இசை”

இரவு 12.00 மணி: பரீக்ஷா சென்னை வழங்கும், பாதல் சர்க்காரின் “முனியன்” – நாடகம், இயக்கம்: ஞாநி.

அதிகாலை 1.30 மணி: யாகசேனா நாடக மன்றம் செய்யாறு வழங்கும் “சைந்தவ பங்கம்” தெருக்கூத்து, ஆசிரியர்: விபீஷன நாயக்கர்.

இவ்விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்:
கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் (தலைவர்), கண்ணப்ப காசி (செயலர்) மற்றும் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் விழா குழுவினர்.

விழா குழுவினர்: திரு. சதானந்த மேனன், திரு பசுபதி, திரு பிரவீன், திரு லோகநாதன், திரு ஸ்ரீஜித் சுந்தரம், கவிஞர் ஆரிசான், திரு அஸ்வினி, திரு ஸ்ரீராம் நடராஜன்.

புரிசை – செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையில் இருக்கிறது. சென்னையிலிருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தொடர்புக்கு:
கண்ணப்ப காசி: 94447 32783, 2474 2743
கண்ணப்ப சம்பந்தன்: 94861 71771, 2412 2343
விழா இயக்கம்: மு பழனி – 95661 71624
தொழில்நுட்ப இயக்குனர்: வ. பாஸ்கரன் – 9444 481263

டிஸ்கி: கிராமியக் கலைகளில் விருப்பமுள்ள நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி விழா சிறப்பே நடைபெற உதவுங்கள். இதனை தொடர்பதிவாக எடுத்துக் கொண்டாலும் சரி... ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்கு இந்த விழா சென்று சேர்ந்தால் சரி... நன்றி..

1 comment:

  1. கிருஷ்ணா கலைகள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete