Wednesday, April 13, 2011

சிறுகதைப் போட்டி - 2011

நெய்வேலி, ஏப். 12: தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் சில விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது. இதில் தமிழகம் முழுக்கவுள்ள எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று பரிசுகளை வென்றுவருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர் கீழ்கண்ட விதிகளுக்குள்பட்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.

முதல் பரிசு - ரூ.10 ஆயிரம்
இரண்டாம் பரிசு - ரூ.5 ஆயிரம்
மூன்றாம் பரிசு - ரூ.2 500
ஆறுதல் பரிசுகள் - தலா ரூ.1,250 (5)

1)போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
2) சிறுகதைகளை - "தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி, தினமணி நாளிதழ், எண்-29, 2-வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-600058 என்ற முகவரிக்கு ஜூன் 4-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்."

நன்றி: தினமணி நாளிதழ்

*****************************************************************************************************

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011

படைப்பாளிகளே, வாசக எழுத்தாளர்களே! நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி வந்தே விட்டது!

தவிர, பிரசுரத்துக்குத் தேர்வாகும் ஒவ்வொரு கதையும் ரூ 500 சன்மானம் பெறும். யார் வேண்டுமானாலும், எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என்றாலும், எழுதுபவர் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவராகவோ அல்லது அறிமுக எழுத்தாளராகவோ இருந்தால் சிறப்புப் பரிசு உண்டு.

முதல் பரிசு : ரூ 10,000/-
இரண்டாம் பரிசு : ரூ 7,500/-
மூன்றாம் பரிசு: ரூ 5,000/-

விதிமுறைகள்:

* கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது.

* சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்படமாட்டா.

* அறிமுக எழுத்தாளர் எனில், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலும் எழுதியதில்லையென்றும், போட்டி முடிவு வெளியாகும் வரை எழுதுவதில்லை என்றும் உறுதிமொழி தர வேண்டும்.

* படைப்பாளி முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவராக இருந்தால், அதற்கான ஏதாவதொரு அத்தாட்சி (பத்தாம் வகுப்பு டி.சி. - ஜெராக்ஸ் போன்றவை. நகல் மட்டுமே அனுப்பவும்) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

* முழு வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

* தேர்வாகாத கதைகளைத் திரும்பப்பெற, போதிய தபால்தலைகள் ஒட்டிய அஞ்சல் உறை இணைக்கப்பட வேண்டும். பின்னால் தனியே அனுப்பிப் பயனில்லை.

* போட்டிக்கு அனுப்பும் கதையை, முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ, இணையதளத்துக்கோ, வலைப் பதிவுகளுக்கோ, போட்டிக்கோ அனுப்பக்கூடாது.

* மின்னஞ்சலில் கதைகளை அனுப்புவோர் சப்ஜெக்ட் லைனில் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி-2011’ என்று குறிப்பிட்டு kalki@kalkiweekly.comக்கு அனுப்பலாம். கதைகள் இணைப்பாக (அட்டாச்மென்ட்) யுனிக்கோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.

* பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி.

* முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, இமெயில் விசாரிப்புகளோ கூடாது.

* ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி-2011’ என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு, அனுப்ப வேண்டிய முகவரி :

ஆசிரியர்,
கல்கி,
கல்கி பில்டிங்க்ஸ்,
47-NP, ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.

* கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி: ஜூன் 15, 2011

* போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் ஆகஸ்ட் 7, 2011 ஆண்டு மலரில் வெளியாகும்.

படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.

- ஆசிரியர் - கல்கி

நன்றி: அகநாழிகை.

2 comments: