Monday, August 9, 2010

கேணி இலக்கிய சந்திப்பு - ஷாஜி

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தொடரும் கூட்டம் என்பதால் எப்பொழுதும் வருவதை விடக் குறைவாகவே நண்பர்கள் வந்திருந்தார்கள்.

திரையிசை மீதான கவனத்தையும், ஆராய்ச்சியையும் பொருட்படுத்தி ஷாஜி பேச இருப்பதாக ஞானி அறிவித்தார். முக்கியமாக கவனம் செலுத்தப் பட வேண்டிய துறைகளில் இதுவும் ஒன்று என்பது உண்மையே. இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அவர்களுடைய திறமை தனித்தன்மை என ஆங்காங்கு பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும் நடு நிலைமையோடு எழுதப்படுகிறதா? விமர்சிக்கப்படுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாடல்களை ஒளிபரப்பும் எந்த வானொலியைத் திருப்பினாலும் ஓயாத பேச்சு. அவையெல்லாம் பாடல்களையும், இசையையும் தவிர்த்த மற்ற பேச்சுக்கள். பாட்டுப் போட்டியை நடத்தும் எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தாலும் ஆடுகிறார்கள். அது பாட்டுப் போட்டியா? நடனப் போட்டியா? இல்லை மாறுவேடப் போட்டியா என்று குழப்பமாக இருக்கிறது.

Jan 24 2007 - Maestro Illayaraja - Dasarathy தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூன்று பகுதிகளையும் தரவிறக்கிக் கேட்க முடியும் (http://www.itsdiff.com/Tamil2007.html). உங்களுக்குப் பிடிக்குமெனில் கேட்டுப் பாருங்கள். 4 வருடங்களுக்கு முன்பு கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த நாட்களில் கேட்டது. இன்று கேட்டாலும் அந்தப் பாடல்களின் நுணுக்கம் ஆச்சர்யப் பட வைக்கும். இளையராஜாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் படிக்கக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். அவற்றைப் போக்கும் வகையில் தான் அகிலன் (http://meedpu.blogspot.com) மற்றும் ஷாஜியின் (http://www.musicshaji.blogspot.com) வலைப் பூக்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.

இருவருமே தங்களுக்கு இசையைப் பற்றிய இலக்கண வடிவங்கள் தெரியாது, இனிமையாகப் பாட வராது என்று சொல்லிவிட்டுத்தான் அதைப் பற்றி எழுதுகிறார்கள். ஆகவே அவர்களுடைய ரசனை சார்ந்தும், தொழில் நுட்ப அறிவு, வியாபார அனுபவம் சார்ந்தும் தான் திரையிசையை அணுகுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிலும் ஷாஜியின் திரையிசை அணுகு முறை கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், ஆளுமையையும் அலசுவதாக இருக்கிறது. அதற்கான எதிர்வினையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை கேணியின் விவாதத்தின் பொழுது புரிந்துகொண்டேன்.

எப்பொழுது கேணிக்குச் சென்றாலும் பேப்பர், பென்சிலுடன் தான் உட்காருவேன். இந்த முறையும் அப்படித்தான் அமர்ந்திருந்தேன். கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்த பத்ரி பாக்கட்டிலிருந்து எதையோ எடுத்து ஒலிப் பெருக்கியின் அருகில் தலை கீழாகத் தொங்கவிட்டார். கோடை தாகத்தில் நாவறண்ட ஜீவன் தண்ணீர் குடிப்பது போல அந்தக் கருவியும் எந்தொரு சப்தங்களையும் மிச்சம் வைக்காமல் முழுங்கி விட்டது. விமான சப்தம், ஷாஜியின் பேச்சு, இருமல், நாய்க்குரைப்பு என எல்லாவற்றையும் கேட்கலாம். பத்ரியின் வலைப் பூவிற்குச் செல்லுங்கள்.

கேணி இலக்கிய சந்திப்பின் முழு ஒலி ஓடையையும் பத்ரியின் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_9814.html

குறிப்பு:
1. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று நடைபெறும் கேணி சந்திப்பு, ஞாநியின் குடும்ப திருமணத்தை ஒட்டி செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்க இருக்கிறது.
2. ஷாஜியின் இரண்டு புத்தகங்கள் உயிர்மையில் வாங்கக் கிடைக்கிறது.

6 comments:

  1. ஷாஜி நம்பர் தெரியுமா? கிருஷ்ணா.
    இல்லை மின்னஞ்சல் முகவரியாவது.... ஒரு சந்த்கேகம் கேக்க வேணும்.
    எப்படி இருக்க கிருஷ்ணா?

    ReplyDelete
  2. ஒவ்வொரு கேணிக் கூட்டமும் உங்கள் பதிவுடன் தான் முழுமையடைகிறது கிருஷ்ணா!

    ReplyDelete
  3. @ முரளி: அவருடைய மின்னஞ்சல் முகவரி 'சொல்லில் அடங்காத வாழ்கை' என்ற புத்தகத்தில் இருக்கிறது. எடுத்து அனுப்புகிறேன். அவருடைய செல்பேசி இலக்கங்கள் என்னிடம் இல்லை...

    @ வெயிலான்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க.. கிருஷ்ணபிரபு. அதுவும் பத்ரி ரிக்கார்டர் மேட்டர்.. ரசிச்சேன். :))

    நன்றி

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா.

    வெயிலான் அண்ணன் சொன்னது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  6. நன்றி பாலு & சரவணா குமார்

    ReplyDelete