Friday, October 15, 2010

அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

அமெரிக்காவில் இருக்கும் பொழுது aesthetic intelligence - சார்ந்த ஒரு புதிர் விளையாட்டில் அனில் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டாராம். அதனை கேணி உரையாடலின் இடையில் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு ஒரு பேனாவும் காகிதமும் போதும் என்றார். வந்திருந்த 80-ற்கும் அதிகமான நண்பர்களில் 8-ற்கும் குறைவானவர்களே பேனா-பேப்பருடன் வந்திருந்தோம். அதில் நானும் ஒருவன். புதிரின் ஆரம்பமாக அவர் சொல்லும் பெயர்களை வரிசையாக எழுதச் சொன்னார். அவர் உதடசைத்து உச்சரித்த பெயர்கள்...

1) Gnani
2) Pushpa
3) Hari
4) Arivazhagan
5) Surya

"இந்தப் பெயர்களை உங்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றி வரிசைப் படுத்துங்கள்" என்றார்.

"எவ்வளவோ பண்றோம்... இதைப் பண்ண மாட்டோமா!" என்று வரிசையை '2 - 1 - 3 - 5 - 4' இப்படி மாற்றினேன்.

"நீங்கள் ஏன் இப்படி வரிசையை மாற்றினீர்கள்? காரணம் என்ன?" என்று முதல் வரிசையில் இருந்ததால் என்னிடமிருந்து உரையாட ஆரம்பித்தார்.

2) Pushpa - அம்மாவின் பெயர்
1) Gnani - பிடித்த எழுத்தாளர் மற்றும் கேணி நண்பர்
3) Hari - என்னுடைய பழைய கம்பெனியின் நிறுவனர். வேலை கொடுத்து உபசரித்த நண்பர்.
5) Surya - இந்த பெயரில் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
4) Arivazhagan - நல்ல தமிழ் பெயர். Out of fashion என்று சொல்லவில்லை. இந்தப் பெயரில் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை என்றேன்.

"நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்" என்றார்.

"யாராவது அகர வரிசைப்படி எழுதி இருக்கிறீர்களா?" என்றார்.
ஒரு சிலர் ஆம்... என்றனர்.

"யாராவது வரிசையை மாற்றாமல் அப்படியே இருக்கட்டும் என்று இருக்கிறீர்களா?".
ஒருவர் தலையசைத்தார்.

யாராவது வார்த்தையின் நீள அளவை கருத்தில் கொண்டு அடுக்கி இருக்கிறீர்களா?.
ஒருவர் மட்டுமே அதுபோல அடுக்கியிருந்தார். அதாவது,

3) Hari
1) Gnani
5) Surya
2) Pushpa
4) Arivazhagan

இந்த முறையில் யார் அடுக்கி இருக்கிறார்களோ, அவர்கள் மிகுந்த அறிவாளிகள், உலகின் ஒரு சதவிகித மனிதர்களுக்குத் தான் இந்த அழகியல் அறிவு இருக்கும். இசை அல்லது நுண்கலையைப் படித்திருந்தால் இந்த அறிவு அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அந்த நண்பரைப் பார்த்து கேட்டார். அவரும் டிசைன் சமந்தப்பட்ட வேலையில் இருப்பதாகக் கூறினார்.

இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது குறிவைத்துப் பழி வாங்கியதா என்று தெரியவில்லை. கொடுத்திருந்த பெயர்களில் நால்வர் எனக்கு நெருக்கமானவர்கள். அது மட்டுமில்லாமல் Keyboard 4 மாதமும், கிடார் - 8 மாதமும் பயின்றிருக்கிறேன். போலவே என்னுடைய மாமா வெங்கட் - ஆயில் பெயிண்டிங், அக்ராலிக் பெயிண்டிங் போன்றவற்றை செய்து உலக வங்கிக்கும், பல பெரிய நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடைசி நாள் வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். இது போதாதென்று ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வெங்கட்டின் தனியறைகுச் சென்று அவர் வரைந்திருக்கும் வண்ண ஓவியங்களைப் பார்த்து "இந்த கலர் காம்பினேஷன் நல்லா இருக்கே, இந்த Brush Stroke நல்லா இருக்கே" என்று நுணுக்கமாகப் பாராட்டவும் செய்வேன். இருந்தும் அழகியல் அறிவு என் மூளைக்கு எட்டாதது என்? எதற்கும் மாமாவிடம் இதே விளையாட்டை விளையாடிப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்.

அழகியல் அறிவைத் தவிர்த்து இசையானது மருத்துவ ஆராய்ச்சியிலும் சில நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. லேண்ட் மார்க்கில் சென்று பார்க்க வேண்டுமே! Vedic mantras for Pregnancy ladies, Music for Kidneys, Heart, Stomach, Relax என்பது மட்டுமில்லாமல் Music for pregnancy ladies, Diabetics, Music for baby's sleep, Prenatal music என்று பல வகைகளில் இருக்கிறது. "இவையெல்லாம் உண்மையிலேயே பயனுள்ள இசைத்தானா அல்லது விற்பனை நோக்கில் செய்யப்படுகிறதா?" என்று கேட்டேன்.

மனித மூளையைத் தூண்டும் தன்மை இசைக்கு இருக்கிறது. ஆனால் இவர்கள் செய்வது வியாபார நிமித்தமாகத் தான். அதிகமாக நம்பாதீர்கள்.

சில இசை உங்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிடும். Mozart Effect - என்ற இசையியல் ஆராய்ச்சி கூட நடந்து கொண்டிருக்கிறது. Mozart-ன் இசையைக் கேட்கும் பொழுது மூளையின் சில பகுதிகள் பிரத்யோகமாகச் செயல்படுகிறது என்பதை நிறுபித்திருக்கிறார்கள். நல்ல உணர்வுகளைத் தூண்டுமாறு இசையைக் கேட்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பாடல்களை அதிகம் கேட்காதீர்கள். அது மூளைக்கு நல்லது அல்ல என்று அனில் பகிர்ந்து கொண்டார்.

"யுவன் இசையமைக்கும் பொழுது சில ஒலி அதிர்வுகளில் பாடல் பதிவு செய்யாதே என்று சொல்லிவிடுவேன். அப்படி இருந்தாலும் அதை நீக்கச் சொல்லுவேன். ஏனெனில் சில அதிர்வுகளில் பாடல்களைக் கேட்பது மனித மூளைக்கு நல்லதல்ல. அதுபோன்ற இசையைக் கொடுப்பது பாவம்" என்று இளையராஜா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. இதை மாஸ்ட்ரோ பகிர்ந்து கொண்ட பொழுது யுவன் அருகில் இருந்தார்.

தற்போது கேட்கக் கூடிய இசை எல்லாமே அதிகமான இரைச்சலைக் கொண்டுதான் வருகின்றன. அப்படியெனில் நம் மூளையைக் கெடுக்கக் கூடிய வேலையை தான் இசையமைப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்களா?

அனில் ஸ்ரீநிவாஸ் - 2 - அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

4 comments:

  1. பகிர்வுக்கு நன்றி பிரபு. எனது வரிசை
    அறிவழகன்
    சூர்யா
    ஞானி
    ஹரி
    புஷ்பா
    //தற்போது கேட்கக் கூடிய இசை எல்லாமே அதிகமான இரைச்சலைக் கொண்டுதான் வருகின்றன.//
    இப்படியான இசை அடையாளம் காண்பது எப்படி பிரபு .. ?

    ReplyDelete
  2. நல்ல பதிவு கிருஷ்ணா! இசை மூலம் எதைச் செய்ய வேண்டுமோ அதை இப்போதிருக்கும் இசை கர்த்தாக்கள் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. பல குத்துப் பாடல்களைச் சொல்லலாம். மெகா சீரியலின் பின்னிசையைக் கேட்டுப் பாருங்களேன் வேல்கண்ணன். சொல்ல முடியாத எரிச்சல் உங்களை ஆக்கிரமிப்பதை உணரலாம்.

    ReplyDelete
  4. உண்மைதான் சேரல்.

    ReplyDelete