Wednesday, April 17, 2013

டீன் வொர்க்ஷப் - சென்னை

photo & design courtesy: dinakaran.com
மைன்ட் ஃபிரஷ் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறார். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார். இவர் குழந்தைகள் சார்ந்தும், கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் சார்ந்தும் ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். இன்போசிஸ்,அண்ணா பல்கலைக்கழகம், அசோக் லைலேன்ட், அழகப்பா பல்கலைக்கழகம், பம்பாய் பங்குவர்த்தக நிறுவனம், KGB செக்யூரிட்டிஸ் போன்ற ஸ்தாபனங்கள் இவருடைய வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

“ஃப்ளையிங் எலபேன்ட்ஸ்” – ஓர் அறிமுகம்:

“மொபைல், இன்டர்நெட், ஐ-பேட், டிவி” என கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் நவீன ஊடகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த படிதான் இருக்கின்றன. “கிரிக்கெட், ஃபலே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ்” என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நேரத்தை விழுங்கும் இதுபோன்ற உபகரணங்களால் – மன அழுத்தம், மன இறுக்கம் அதிகமாகி – வளரிளம் பருவ குழந்தைகளின் படிப்பு பாத்திக்கிறது. இதனைக் கடக்காத பெற்றோர்களே உலகத்தில் இருக்க முடியாது. மைன்ட் ஃப்ரெஷின் இந்த நான்கு நாள் பயிலரங்கம் அதற்கான தீர்வாக இருக்கும்.

குழந்தைகளின் முழுத் திறனையும் கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து – முழு கவனத்தையும் படிப்பில் குவியச் செய்யும் வகையில் பயிலரங்கத்தின் பாடத் திட்டங்கள் இருக்கும். கல்வியை தேர்வுக்கான ஆயத்தமாக அல்லாமல், அவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டைப் போலவே குழந்தைகளின் இலக்காக படிப்பை மாற்றும் பயிலரங்கம்.

“என் பையன் எப்பப் பாரு மொபைல் போன் வச்சிட்டு நோன்டிட்டே இருக்கான்...!”

“என்னோட பசங்க நல்லா படிப்பாங்க...! ஆனா சொல்பேச்சு கேக்குறது இல்ல...! பெரியவங்கள மதிக்கறதே இல்ல...! தானென்ற திமிர்...!”

“என்னோட பையன் விளையாட்டுன்னா... தோ வந்துட்டேன்னு முன்னாடி போயி நிக்கிறான்... ஆனால் படிக்கறதே இல்ல...!”

“என் பையன் நல்லா படிச்சிட்டு இருந்தான்... ஒன்பதாவது போனதுல இருந்து ரொம்ப மோசம் ஆயிட்டான்...!”

“பத்தாவதுல என் பையன் ஸ்கூல் ஃபஸ்ட். பதினொன்னாவது வேற ஸ்கூல் மாத்தினோம்.... அதுல இருந்து அவன் படிக்கறதே இல்ல...!”

- இது போன்ற ஏராளமான குறைகளுடன் தான் கீர்த்தனாவிடம் பெற்றோர்கள் வருவார்கள். “வளரிளம் பருவம்” என்பது மனக் கிளர்சியும், அதையொட்டி எழும் ரகசியக் கேள்விகளும் குழப்பங்களும் கலவரங்களும் அடையும் பருவம். கணினி, செல்பேசி போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் நம்மைக் கற்பனை உலகில் கட்டிப்போடுகிறது. ஒரேயொரு கிளிக் போதும். ஆன்மிகம் முதல் ஆபாசம் வரை செவ்வகத் திரையில் கண்டுகளிக்கலாம். தமது குழந்தைகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை அதிகமாகப் பயன்படுத்துவது தான் இன்றையப் பெற்றோர்களின் ஆகப் பெரியக் கவலையே. குழந்தைகள் வெளிப்படுத்தும் மட்டற்ற கோவம், சொல் பேச்சுக் கேளாமை,உணர்வுக் குமுறல், படிப்பில் மங்கிக்கொண்டு வருதல், மன அழுத்தம் மற்றும் மன வேதனை என பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

“கணிதம், வேதியியல், இயற்பியியல்” என எத்தனையோ படங்களை இந்தியப் பள்ளிகளின் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம். பெற்றோர்களின் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக “அபாக்கஸ்,மியூசிக், கராத்தே, யோகா” என விடுமுறையிலும் கூட குழந்தைகளை ஏதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். ஆனால் “வாழ்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்...” என்பதை போதிக்கும் ஏதேனும் ஒரு பள்ளி இந்திய அளவில் இருக்கிறதா? நவீன உலகத்தின் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையிலான கற்பித்தல் முறை நம் இந்திய சமூகத்தில் இருக்கிறதா?

இந்த இடைவெளியை நிரப்ப கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி “மைன்ட்ஃப்ரஷ்” என்ற நிறுவனத்தைத் துவங்கி பயிற்சியளித்து வருகிறார். இதில் 12 வயது சிறுவர் முதல் 60 வயது முதியவர் வரையிலும் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப பலவிதப் பட்டறைகளை கீர்த்தன்யா ஏற்பாடு செய்திருக்கிறார்.

“FLYING ELEPHANTS” என்பது 12வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மூன்றரை நாள் பயிற்சிப் பட்டறை. குழந்தைகளின் “கவனக்குறைவு, கவனச்சிதறல்” போன்ற அகச் சிக்கல்களையும், உடல் சார்ந்த சிக்கல்களையும் அவர்களாகவே புரிந்துகொண்டு –அவற்றைச் சரிசெய்து கொள்ளும் தன்மையில் அமைந்த பயிலரங்கம் இது. மனித மூளையின் முழுச் செயல்திறனை “அறிவியல், விஞ்ஞானம், உளவியல்” போன்ற தன்மைகளில் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பி, தனிப்பட்ட ஒவ்வொருவரின் செயல்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறார்.

“பறக்கும் யானை” என்ற வித்யாசமான பெயரைப் பற்றிய கேள்விகள் உங்களுக்கு எழலாம். மனதை ஒருமுகப்படுத்தும் பளுதூக்கும் வீரன், தன்னிலும் பத்துமடங்கு எடையினை ஒலிம்பிக்கில் தூக்கி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் செல்கிறான். அது எப்படி அந்த வீரனால் முடிந்தது. மனம் வைத்தால் யானை போன்ற பாரத்தையும் தூக்கிக்கொண்டு பறக்கலாம் என்பதுதான் உண்மை.

“FLYING ELEPHANTS” மூலம் என்ன நடக்கும்? என்பதற்கு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியரின் மகன் யஷ்வந்தின் கல்வி முன்னேற்றம் இதற்கு நல்ல உதாரணம். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேடுப்பதால், அதற்கான பயிற்சியை மேற்கொள்வதால் யஸ்வந்தால் படிப்பில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை யஷ்வந்த் 50 மதிப்பெண்களைத் தாண்டியதில்லை. இவனுக்குப் படிப்பில் ஆர்வமே இருந்ததில்லை. தந்தையோ அல்லது தாயோ பக்கத்திலிருந்து அவனை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். “நான் ஒன்னும் படிப்புல கெட்டி இல்ல... கணக்கு பாடம் எனக்கு சுத்தமா வராது...” என அவனுக்கான எல்லைகளை அவனே வகுத்துக் கொண்டு,அதில் வட்டமடித்துக் கொண்டிருந்தான். “நான் படிப்புல சுமார் தான்...” என்ற தாழ்வு மனப்பான்மையில் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பான். இதனால் அவனுடைய நீச்சல் பயிற்சியிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் தவித்தான்.

“FLYING ELEPHANTS”-ன் மூன்றுநாள் பயிலரங்கம் அவனுக்கே அவனை யாரென்று அடையாளம் காட்டியது. சின்னச் சின்ன பயிற்சிகள் மற்றும் விளையாட்டின் மூலம் ஆழ்மனதின் உத்வேகத்தைத் தூண்டியத்தில், அவனுடைய அபரிமிதமான செயல்திறன் வெளிப்பட்டது.வகுப்புப் பாடங்களை சுலபமாகப் படித்து அதனை கிரகித்துக்கொள்ளும் வழிமுறைகளை அவன் புரிந்துகொண்டான். இப்பொழுது தற்போது எல்லா பாடங்களிலும் தொடர்ந்து 90 மதிப்பெண்களைப் பெற்று வருகிறான்.

டீன்னேஜ் வயதில் தோன்றும் காதல் பற்றியும், அதன் சிக்கல் குறித்தும் கூட வளரிளம் பருவ குழந்தைகளிடம் பேசி, அது சார்ந்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். “கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட்” கலாச்சாரம் தற்போது பெரிதாக வளர்ந்து வருகிறது. இதுவே பிள்ளைகளின் படிப்பு சார்ந்த கவனச் சிதறலை ஏற்படுத்தும் மிக முக்கியமான விஷயம். இதனைச் சரியாகக் கையாளாமல் வேறொன்றும் சாத்தியம் இல்லை. ஆகவே ஹார்மோன் தூண்டுதலில் அறியாத வயதில் தோன்றும் காதல் குறித்தும் அவர்களிடம் பேசி, அது சார்ந்த சிக்கல்களை தீர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வீட்டில் சண்டை போடுதல் அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற செயல்களால் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் பயத்தையும், உணர்வுக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றனர். ஒரு பையன் தனது தாயாருடன் கீர்த்தயாவிடம் வந்தான். அவனுடைய தந்தைக்கு வித்யாசமான ஒரு சுபாவம் இருந்தது. எல்லாமே அவருக்கு பிரச்சனை தான். சிறு பிழைக்குக் கூட கற்பனை செய்ய முடியாத சண்டையிட்டு ஊரையே கூட்டிவிடுவார். பருவ வயதைப் பையன் அடையும் பொழுது அவனுக்கும், எதற்கெடுத்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை வந்துவிட்டது. மூன்றரை நாள் டீன் வொர்க்ஷபிற்கு அனுப்பி வைக்குமாறு அவனது தாயிடம் பரிந்துரைத்தோம்.. பயிற்சிப் பற்றைக்குப் பின், பெற்றோருடனான அவனது உறவுமுறை பெரிதும் மாறிவிட்டது. தேவையில்லாத பிரச்சனைகளுக்கு சண்டையிடுவதைக் காட்டிலும் தனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டான்.

பயிலரங்கின் இறுதிநாளில் “Flying Elephants” ல் பெற்றோர்களுக்கான அமரவும் இருக்கிறது. குழந்தைகளை அவர்களின் மகிழ்ச்சியான தருனங்களைக் குலைக்காமல் – நல்ல முறையில் வழிநடத்த இந்த அமர்வு பயன்படும்.

பயிற்சிப் பட்டறையானது நியூரோ லிங்குஸ்டிக் ப்ரோகிராம் (NLP), தொழில்முறை பகுப்பாய்வு (TA), சில்வா மைண்ட் Dynamix மற்றும் சமூக உளவியல் ஆகியவை கலந்த பயிற்சி முறையாகும். பயிலரங்கமானது பெரும்பாலும் கோடை விடுமுறை மற்றும் குறுகிய விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

எதிர்வரும் 25, 26, 27, 28 April 2013ஆகிய நான்கு நாட்களுக்கு பயிலரங்கம் ஏற்பாடாகியுள்ளது. 9840927660 / 8939221530 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து பயிலரங்கத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். 40 குழந்தைகள் மட்டுமே ஒரு பயிலரங்கில் கலந்துகொள்ள முடியும்.

(இதனைத் தொடர்ந்து மே மாதத்திலும் இரண்டு பயிலரங்கங்கள் ஏற்பாடாகியிருக்கிறது.)

வெப்சைட் : www.mindfresh.in. மின்னஞ்சல்:contact@mindfresh.in Mob: 9840927660 / 8939221530

“ஃப்ளையிங் எலபேன்ட்ஸ்” பற்றிய காணொளிகள்:
www.youtube.com/watch?v=GOrLavITFI0,
www.youtube.com/watch?v=q9wne2Fmn3c
www.youtube.com/watch?v=oRezTFonB-g

முந்திய பயிலரங்கில் பங்கு பெற்றவர்களின் அனுபவங்கள்:
www.youtube.com/watch?v=Z_adpYDN79w
www.youtube.com/watch?v=t7XzCAIA1eA

கீர்த்தன்னாயா-வின் இதர காணொளிகள்:
www.youtube.com/user/TheMindfresh

1 comment: