Monday, February 8, 2010

லைப் ஸ்கில்ஸ் - புத்தக வெளியீடு

கேணியில் இதுவரை இலக்கிய சந்திப்புகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக சென்ற வாரம் ஞாநி மற்றும் ஏ.எஸ்.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்ட லைப் ஸ்கில்ஸ்’ புத்தகம் வெளியிடப்பட்டது. குழந்தைப் பருவம் முதல் வயோதிகப் பருவம் வரை பல்வேறு துறையிலுள்ள அனைவருக்கும் பயன்படக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி நூல் இது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

'சுய முன்னேற்றம், வாழும் கலை' போன்ற விஷயங்களில் பிடிப்பிருந்தாலும், புத்தகங்களாக வாங்கிப் படிப்பது குறைவு தான். ஆகவே 'என் வாழ்க்கை என் கையில்' - புத்தக வெளியீட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு மனநிலைகளில் இருந்தேன். சென்று பார்ப்போம் பிடிக்கவில்லையெனில் திரும்பிவிடலாம் என்று தான் கேணிக்குச் சென்றிருந்தேன்.

டாக்டர் வசந்தி தேவி, ஸ்ரீராம், ராஜீவ்காந்தி யூத் ஃபவுண்டேஷன் உயர் அதிகாரி, நாசர், Life skills trainer ஒருவர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து பத்மாவதி Life Skills பற்றி உரையாற்றினார்.

1. நான் யார் என்று உணர்
2. தன்னைப் போல் பிறரை நினை
3. உறவாட கற்றுக்கொள்
4. உரையாட கற்றுக்கொள்
5. எதையும் கேள்வி கேள்
6. எதற்கும் பதில் கண்டுபிடி
7. தெளிவான முடிவெடு
8. சிக்கல்களை அவிழ்
9. உணர்ச்சிகளை உணர்ந்துகொள்
10. அழுத்தங்களை லேசாக்கு

ஆரம்பத்தில் இந்தப் பத்து கட்டளைகளை பாலியல் தொழிளார்களுக்கு வகுப்பெடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனால் இதையே குழந்தைக் குற்றவாளிகள், மன அழுத்தத்திலிருக்கும் பள்ளி சிறுவர்கள், இன்னும் சொல்லப் போனால் அனைத்து துறையினரும் பயன்படுத்தலாம் என்று கூறினார். தமிழ்நாடு AIDS கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளில் பயிற்சியாளராக தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒருசில நிறுவனங்கள் இவர்களை அழைத்து ஒரு நாளில் வகுப்பெடுத்து முடிக்கச் சொல்வார்களாம்.
பயிற்சியின் முழுப்பலன் கிடைக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிர்ச்சியாளர்கள் செல்வார்கள். ஒரே நாளில் எடுக்கும் பொழுது பல பயிற்சிகள் விடுபட்டுவிடும். சரியான கால அவகாசத்தில் இந்தப் பயிற்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனை அளிக்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.

முதல் பிரதியை சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் பிறகு ஞானியின் சகோதரிகள் இருவருக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்கும், கேணி வீட்டின் உரிமையாளர் திரு: புருஷோத்தமன் அவர்களுக்கும்
பிரதியை வழங்கினார்கள். புருஷோத்தமன் புத்தகத்தை பெற்றுக்கொள்ள வரும் பொழுது பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது. அண்ணார்ந்து பார்த்தேன். கேணியின் மாடியிலிருந்து வயதான பெண்மணி சந்தோஷமான முகத்துடன் புருஷோத்தமனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். கடைசியாக, பள்ளிச் சிறுமியின் infatuation சமந்தமான பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, நாசர் மற்றும் துணை நடிகர்கள் நடித்த 'ஆனந்தி' என்ற குறும்படத்தைத் திரையிட்டார்கள். புத்தகத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் அனைவரும் இருந்து பார்த்தனர். படம் முடியும் பொழுது மணி 7.30 PM. ஆகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

இதே புத்தக வெளியீட்டைப் பற்றி நண்பர் ரவிபிரகாஷ் எழுதிய பதிவினைப் படிக்க கீழே அழுத்தவும்:


3 comments:

  1. Hi Prabhu, I read Ravi Prakash blog, I was totally confused about how they are not understanding Gnani and what he is trying to say... Anyway

    ReplyDelete
  2. புரிதல் நபருக்கு நபர் மாறுபடும் பிரபாகரன். நண்பர் ரவிபிரகாஷ் அவருடைய ஞாபகத்தில் இருப்பதை எழுதி இருக்கிறார். ஒரு வகையில் நீங்கள் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து பல விஷயங்கள் விடுபட்டிருப்பதால் அப்படித் தோன்றலாம். அடுத்த முறை கேணியில் சந்திக்கும் பொழுது பேசலாம். வருகைக்கு நன்றி... (கார்த்திகைப் பாண்டியனுக்கும்)

    ReplyDelete