Monday, October 19, 2009

கவிதை வாசிப்பு...1 - சேரல்

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள் - சேரலாதன்
(http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html)

******************************
"அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன" - மழை நாட்களில் தெரு விளக்குகள் விட்டு விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்து நட்சத்திரம் போல் தோற்றம் அளிக்கின்றன. இதுவரை கவிதையைப் புரிந்து கொண்ட எனக்கு அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை.

'நதி விழும்
மழைத்துளிகள்' - நதி எப்படி விழும். மழைத்துளிகள் தானே வானத்திலிருந்து பூமியை நோக்கி கீழே விழும்.

மேலே உள்ள தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகத்திற்கும், கடைசியில் உள்ள வரிகளுக்கும் சமந்தமே இல்லையே என்று சேரலுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

கி.பி: சேரல் உன்னுடைய கவிதையைப் படித்தேன். கொஞ்சம் கேள்வி கேட்கணுமே... வேலையா இருக்கையா என்ன?
சேரல்: அதனால என்ன , கேளுங்க கிருஷ்ணா... :-)
கி.பி: தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகம் புரியுது. அதற்கு அடுத்த இரண்டு வரிகளுக்கும் பாயைப் பிராண்ட வச்சுட்டயே!
சேரல்: இல்ல கிருஷ்ணா, அங்க தான் தப்பு பண்றீங்க... மழைத்துளிகள் தான் இங்கு நட்சத்திரங்களுக்கு உவமையாகின்றன.
கி.பி: இதோ பாரு சேரல், இந்த fraud-வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.
சேரல்: (சிரிக்கறாரு...) நான் ஆத்தங்கரைப் பக்கமா இருக்கேன்னு வச்சுக்கோங்க. அங்க தெரு விளக்கு விட்டு விட்டு எரியுது. இது ஒரு நிகழ்ச்சி... இந்த வெளிச்சத்தின் ஊடக நான் மழைத்துளியை பார்க்கிறேன்.
கி.பி: சரி...
சேரல்: Street Lamp விட்டு விட்டு எரியும் போது மழைத்துளியில் வெளிச்சம் பட்டு, துளிகள் அனைத்தும் எனக்கு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே "நட்சத்திரங்களாகிய மழைத் துளிகள் நதியில் விழுகின்றன - (நதி விழும்
மழைத்துளிகள்) என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.பி: அடடே விளக்கம் நல்லாத்தான் இருக்கு . நன்றி சேரல்...

No comments:

Post a Comment