நட்சத்திரத் தொழிற்சாலை
அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு
நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள் - சேரலாதன்
(http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html)
******************************
"அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு
நட்சத்திரங்களாகின்றன" - மழை நாட்களில் தெரு விளக்குகள் விட்டு விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்து நட்சத்திரம் போல் தோற்றம் அளிக்கின்றன. இதுவரை கவிதையைப் புரிந்து கொண்ட எனக்கு அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை.
'நதி விழும்
மழைத்துளிகள்' - நதி எப்படி விழும். மழைத்துளிகள் தானே வானத்திலிருந்து பூமியை நோக்கி கீழே விழும்.
மேலே உள்ள தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகத்திற்கும், கடைசியில் உள்ள வரிகளுக்கும் சமந்தமே இல்லையே என்று சேரலுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து எனது சந்தேகத்தைக் கேட்டேன்.
கி.பி: சேரல் உன்னுடைய கவிதையைப் படித்தேன். கொஞ்சம் கேள்வி கேட்கணுமே... வேலையா இருக்கையா என்ன?
சேரல்: அதனால என்ன , கேளுங்க கிருஷ்ணா... :-)
கி.பி: தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகம் புரியுது. அதற்கு அடுத்த இரண்டு வரிகளுக்கும் பாயைப் பிராண்ட வச்சுட்டயே!
சேரல்: இல்ல கிருஷ்ணா, அங்க தான் தப்பு பண்றீங்க... மழைத்துளிகள் தான் இங்கு நட்சத்திரங்களுக்கு உவமையாகின்றன.
கி.பி: இதோ பாரு சேரல், இந்த fraud-வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.
சேரல்: (சிரிக்கறாரு...) நான் ஆத்தங்கரைப் பக்கமா இருக்கேன்னு வச்சுக்கோங்க. அங்க தெரு விளக்கு விட்டு விட்டு எரியுது. இது ஒரு நிகழ்ச்சி... இந்த வெளிச்சத்தின் ஊடக நான் மழைத்துளியை பார்க்கிறேன்.
கி.பி: சரி...
சேரல்: Street Lamp விட்டு விட்டு எரியும் போது மழைத்துளியில் வெளிச்சம் பட்டு, துளிகள் அனைத்தும் எனக்கு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே "நட்சத்திரங்களாகிய மழைத் துளிகள் நதியில் விழுகின்றன - (நதி விழும்
மழைத்துளிகள்) என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.பி: அடடே விளக்கம் நல்லாத்தான் இருக்கு . நன்றி சேரல்...
Monday, October 19, 2009
Tuesday, October 13, 2009
கேணி இலக்கிய சந்திப்பு - கி ராஜ நாராயணன்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் முதல் வரிசையில் உட்கார்ந்தேன். ஒரு பெண் 'உன்னதம்' இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்து பதிவரான 'துளசி கோபால்' என்று பிறகு தெரியவந்தது. வாயைத் திறந்தால் ஹாஸ்யம் தான். அவருடைய பதிவைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரின் மூலம் 'நாச்சியார்' அறிமுகமானார்.இவர்களைத் தவிர வேறு சில பரிட்சயமான பதிவர்களையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக "அமித்துவின் அம்மா" வந்திருந்தார்கள். அமித்துவைப் பிரிந்து வந்த பதட்டம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது.
ஞானியுடன் கி.ரா தம்பதியர் வருவதைப் பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு அழகான ஜோடி. குழந்தைகளின் குதூகல மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்கின்றனர். கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தவாறே தெரிந்தவர்களின் ஷேம நலன்களை விசாரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.
"கரிசல் தந்தை புதுச்சேரியில் எப்படி இருக்கிறார், எந்த சூழலில் வாழ்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று சொல்லி ஞானி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
"பிரியமான அன்பர்களே... கேணி இலக்கிய சந்திப்பைப் பற்றி ஞானி என்னிடம் சொல்லியவுடன், இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோட்டம், சூழல் மற்றும் அமைப்பு கருதியே பார்க்க வந்தேன். மேலும் இந்தச் சந்திப்பை ஒரு கலந்துரையாடல் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு திருப்தி இருக்கும்" என்று உரையை ஆரம்பித்தார்.
அறிமுக உரையில் ஞானி ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். 'நான் என்ன தலைப்பில் பேசப்போகிறேன்' என்ற தகவல் தான் அது. எனக்கு எந்தத் தலைப்பும் ஒத்து வராது. அதனால் நாட்டுப்புறக் கதைகள் பற்றிப் பேச விரும்புகிறேன். என்னுடைய கதைகளை விட நாட்டுப்புறக் கதைகள் தான் என்னை வசீகரம் செய்தது.
ஆனால் 'மணிக்கொடி' முதல் எல்லோரும் நாட்டுப்புறக் கதைகளை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.
40 எழுத்தாளர்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவித்த புத்தகம் ஒன்று வெளிவரப் போகிறது.அதில் "ஏன் இன்னும் கிராமியக் கதைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? அதைத் தாண்டி ஏன் எழுதவில்லை" என்று என்னிடம் கேட்கிறார்கள்.
கரிசல் இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் ஏராளமாக மீன்கள் இருப்பது போல கிராமியக் கதைகளும் நிறையவே நம்மிடம் இருக்கிறது. தேடல் தான் நம்மிடம் இல்லை. ஆரம்பத்தில் கிராமியக் கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். அதைப் பார்த்து வேறு சிலர் தாமாக முன்வந்து சில கதைகளைக் கொடுத்தார்கள்.
நாட்டுப்புறக் கதையை சொல்ல ஆரம்பித்தால் எங்கோ கேட்டது போலவே இருக்கும். ஒரு பாகவதர் 25 ராகங்களை வைத்துக் கொண்டு வாழ் நாள் முழுவதும் கச்சேரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏன் அந்த ராகங்களையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்று கேட்கிறோமா? விருப்பம் இருக்கிறது என்பதால் கேட்கிறோம். அவரும் பாடுகிறார். அது போலதான் கிராமியக் கதைகளும்.
மறுபடியும் மறுபடியும் ஒரே கதைகளை வேறுவேறு கற்பனைகளில் கேட்கும் பழக்கம் இன்றுள்ள குழந்தைகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்களை அவசரமா பழக்கிட்டோம். "தூங்க சொல்ல எழுப்பி வெளிக்கி(கக்கூஸ்) இருக்க வக்கிறோம், குளிக்க வைக்கிறோம், பள்ளிக்கு அனுப்புறோம். புதுப்புது விஷயங்களை அவர்கள் தெரிஞ்சிக்க வேக வேகமா பழக்கறோம். அதெல்லாம் தப்பு. முன்னடிஎல்லாம் அப்படி இல்ல.
இந்தக் கூட்டத்தை "ராகுகாலக் கூட்டம்"னு சொல்லலாம். ஏன்னா ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகுகாலம். சரியா அந்த நேரத்துல இந்தக் கூட்டத்தை ஞானி ஏற்பாடு பண்ணியிருக்காரு. ராகு போல கொடுக்கரவனும் இல்லை, கேது போல கெடுப்பவனும் இல்லைன்னு சொல்லுவாங்க உங்களுக்குத் தெரியுமா?
இந்த இடத்தில் ஜோசியம் மற்றும் சகுனம் சமந்தமான இரண்டு கதைகளைச் சொன்னார். (ஜோசியரிடம், வியாழன் அவருடைய மகனுக்கு ஜாதகம் கணித்தது மற்றும் நாய் ஒன்று சகுனம் பார்த்து வெளியில் செல்ல நினைக்கும் கதை). 'கிராமியக் கதைகள்- கி. ரா' என்ற புத்தகத்தில் அந்தக் கதைகளைப் படித்த ஞாபகம்.
"இப்படி பேசிக்கிட்டே போனா வெறுப்பா இருக்குதோ?. வேறுமாதிரி வேணும்னா பேசலாமா" என்று சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அந்த நேரம் பார்த்து கிராவிடம் ஞானி ஒரு கேள்வி கேட்டார்.
"ஆரம்பத்தில் இடது சாரியில் இருந்த நீங்கள் பிறகு வேறு திசையில் பயணித்தது எப்படி? உங்களுடைய நம்பிக்கையில் எதனால் மாற்றம் வந்தது?"
"அதாவது ஆரம்பத்துல கம்யுனிஸ்டா இருந்தவனுக்கு, இப்ப கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்க(எல்லோரும் சிரிக்கிறார்கள்) அப்படிதானே?" - என்று பேச்சைத் தொடங்கினார்.
ஆங்கில மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் சமந்தமான ஆராய்ச்சியை தொடர்புபடுத்தி அழகான கதை ஒன்றைச் சொல்லி ஞானியின் கேள்விக்குப் பதிலளித்தார்.
மேலும் பெரியார் ஒரு முறை பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் (ஜெனரேட்டர்) தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாம். இதுபோல் பல முறை நடந்ததாம். பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லிவிட்டாராம். அவரே தன்னை மறந்த நிலையில் மனதின் ஆழத்திலிருந்து அப்படி சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் நேர்வது தானே என்று கூறினார்.
இறுதியில் "கி ராவிற்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அது மாறி இருக்கிறது அவ்வளவுதான்" என்று முடித்தார்.
பிறகு எதைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கினார்.
கடவுள் தொடங்கி, ராஜாக்கள் (ஊர்சுற்றி ராஜாக்கள், நாடாளும் ராஜாக்கள்), பிச்சைக்காரர்கள், பரதேசி, சாதுக்கள், துறவிகள், தேவர்கள், சபைக்கு முன்னாள் சொல்ல முடியாத சில கதைகள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்), பேய், பிசாசு, பூதம், தாழ்வு மனப்பான்மை, திமிர், கர்வம், கோபம், சோகம், இது போன்ற உணர்வுகள், வதந்திகள், அது பரவும் விதம், அறிவாளிகள் பற்றி, மாமியார்-மருமகள் பிரச்சனை, தகப்பன்-மகன், கணவன் மனைவி, பொறாமை, லஞ்சம், வீரம், காதல், நட்பு, பாலியல், ஞாய தீர்ப்பு என எவற்றைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் வந்திருக்கிறது என்று விளக்கினார்.
லஞ்சம், ஞாய தீர்ப்பு, சகுனம், தாழ்வு மனப்பானை பற்றி அவர் கூறிய உதாரணக் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது.
கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் கதைகளிலேயே பதில் கூறினார். ஒருவர் ஹாரி பார்ட்டர் கதைகளை முன்வைத்து கேட்டக் கேள்விக்கு, சுவாரஸ்யமான மாயக் கதை (பெருவிரல் குள்ளன் கதை) ஒன்றைக் கூறினார். நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் 7 மணியைத் தாண்டிச் சென்றதனால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில் 'உன்னதம்' , 'அகநாழிகை' சிற்றிதழ்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாய் இருந்தது. விஷ்ணு அசோகமித்ரனின் நாவலை எனக்காக வாங்கி வந்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு திரும்புவதற்கு மனமில்லாமல் கி. ராவின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.
இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:
ரவிபிரகாஷ் - ராகு காலக் கூட்டம்!
கி.ராவுடன் 'கேணி’யில்...
பி.கு:-
1.இந்தப் பதிவை கி ரா-வின் இயல்பான மொழியில் பதிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவருடைய மொழியை என்னை மறந்து கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் எழுத வரவில்லை. அவர் பேசியதில் 5 சதவீதம் கூட இங்கு பதியவில்லை. அவர் பேசியதின் Outline -என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு, அடுத்த மாதம் முதல் கேணி இலக்கிய சந்திப்பு மாலை 3.30 மணிக்கு நடக்கும் என்று அறிவித்தார்கள்.
Monday, September 14, 2009
சென்னை சிறுகதைப் பட்டறை
நினைத்துப் பார்த்தால் எல்லாமே கனவு போல் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பன் கிறிஸ்டோஃபருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பசியுடன் அலைந்து திரிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. அப்பொழுதெல்லாம் "அல்ஜீப்ரா, ரியல் அனாலிசிஸ், டிரிக்நோமேத்ரி" என தொல்லைகளின் மொத்த உருவங்கள் அவனுடைய கைகளில் இருக்கும். என்னிடமோ "காலச்சுவடு, தீராநதி, உயிர்மை" போன்ற இலக்கிய இதழ்கள் இருக்கும். இதென்ன விந்தை! இந்த இதழ்களில் எழுதுபவர்கள் எல்லோரும் புது உலகின் வாசல்களைத் திறக்கிறார்களே என்று வியப்பாகவும் பரவசமாகவும் இருக்கும். சிற்றிதழ்களுக்கு எழுதுபவர்கள் எங்கு சென்று கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வியும் உடன் எழும். அதைப்பற்றி பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் விடுதியில் நண்பர்களுடன் பேசி இருக்கிறேன்."டேய் எக்ஸாம் வருதுடா... உருப்புடற வழியைப் பாருடா...இப்படியே பேசிட்டு இருந்த நாசமா போயிடுவ" என்று கிறிஸ்டி தலையில் கொட்டுவான். அவனுடைய அக்கறையினால் சில பாடங்களில் தேறினேன் என்பது உண்மை.
கல்லூரி முடித்து (வருடங்கள் மட்டுமே கடந்தது) வேலையைத் தேடவேண்டிய நிர்பந்தம். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தக் காலில் நிற்கப் பிரயத்தனப்பட்டேன். என்னுடைய அக்காவின் மூலம் நல்ல வேலையும் கிடைத்து, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில் சிவராமனின் "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு - சிறுகதைப் பட்டறை" பதிவு கண்ணில் படுமா...!?.
அதுமட்டுமில்லாமல் பதிவெழுதும் நண்பர்கள் முரளி, சேரல், விஷ்ணு மற்றும் அமித்துவின் அம்மா (சாரதா) ஆகியோரும் கலந்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். "ஈஸ்வரா... தமிழ் கூறும் நல்லுலகை என்னிடமிருந்து காப்பாற்று" என்று நானும் மனுச்செய்திருந்தேன்.
Sep 13, 2009 - 9 மணிக்கு முன்பே கதைப் பட்டறை நடக்கும் அரங்கிற்குச் சென்றுவிட்டேன். யுவன் சந்திரசேகரும், பாஸ்கர் சக்தியும் சீக்கிரம் வந்திருந்தார்கள்.
யுவனுடன் இதற்குமுன் பரிச்சயம் இல்லை. பாஸ்கர் சக்தியை யாரென்றே தெரியாமல் அவருடன் பேசியிருக்கிறேன். அது ஒரு வித்யாசமான அனுபவம். பாலு மகேந்திரா பங்கு பெற்ற கேணி சந்திப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருந்தேன். ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டு நீங்கள் யார்? ஞானியுடைய நண்பரா? இங்கிருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களா? என்பது போன்ற தொடர் கேள்விகளைக் கேட்டேன்.
"நான் ஞானியின் நண்பன் தான். ஏதோ கொஞ்சம் எழுதுகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தினார். இந்த சிங்காரச் சென்னையில் முகம் கொடுத்து பேசுவதற்கு ஆளில்லாத போது, வலிய வந்து பேசுபவனை நிராகரித்து வேலை செய்கிறாரே...என்ன ஜென்மமோ என்று மனதிற்குள் குறைபட்டுக் கொண்டேன். நான் கேள்வி கேட்டுத் துளைத்தவர் தான் பாஸ்கர் சக்தி என்பது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தான் தெரியவந்தது.
சிறுகதைப் பட்டறைக்கு வந்திருந்த அவரின் அருகில் சென்று அனைத்தையும் ஞாபகப்படுத்தினேன். "ஓ... அது நீங்கள் தானா" என்று சிரித்தார்.
பிறகு அவரிடமிருந்து பா. ராகவனிடம் சென்றேன். அலகிலா விளையாட்டு நாவலைப் பற்றி எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். அவருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்த மின்னஞ்சலை ஞாபகப்படுத்தினேன். "படிச்சேன்...படிச்சேன்... புத்தகம் கெடச்சுதா" என்று சிரித்தார். இதுவரை அந்த நாவலை ஏழு பேர் வாங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன் என்றதும் சிரித்தார். வேதங்கள் பற்றி நிறைய இடங்களில் வருகிறதே...பாட சாலையில் படித்தவரா என்றதற்கு "ஆம்" என்றார். அப்பொழுது பார்த்து செல்பேசியில் அழைப்பு வர அவரிடமிருந்து விலகிச் செல்லும் படி நேர்ந்தது.
அடுத்தது யுவனிடம் பேசினேன். பழகிய நண்பரைப் போல் விருப்பத்துடன் பேசினார். ஒளிவிலகல் புத்தக முன்னுரையில் "இரண்டு கவிதைத் தொகுப்பு வெளிவந்தும் கவிதைகள் மீதான தெளிவிற்குப் பதிலாக குழப்பமே அதிகமாகி இருக்கிறது. இப்பொழுது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் சமயத்திலும் சிறுகதைகள் மீதான சிடுக்குகள் அதிகமாகிறது. ஆனால் அதைக் கண்டு தீர்ப்பது வாசகர்களின் வேலை" என்று சொல்லியிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்தேன். ஏற்புடைய சில மறுமொழிகளைக் கூறினார்.
அவரிடம் பேசிவிட்டுத் திரும்பும் சமயத்தில் பத்ரி எதிரில் வந்தார். அவருடைய கணக்கு பதிவின் சில பகுதிகள் படிக்கக் கிடைக்கவில்லை அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.
கி பி: Good Morning பத்ரி. உங்களுடைய கணக்குப் பதிவு...
பத்ரி: மெயில் பார்த்தேன். அதில் சில பிரச்சனை இருக்கு. சீக்கிரமே சரி செய்துவிடுகிறேன்.
கி பி: என்னுடைய பல நண்பர்களுக்கு அந்தப் பதிவினை பரிந்துரை செய்திருக்கிறேன்.
பத்ரி: இல்ல... இல்ல... இப்போ வேணாம். Word Press-ல மாத்திட்டு சொல்றேன். பிறகு Recommend பண்ணுங்கோ.
கி பி: நீங்கள் ஏன் அதை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது?
பத்ரி: அப்படி செய்ய முடியாது. யோசிக்கலாம்...
நான்: தயவு செய்து புத்தகமாகக் கொண்டு வாருங்கள். கிழக்கின் நிறுவனர்... நீங்களே இப்படிச் சொல்லலாமா?"
பத்ரி:"Publisher என்பதால் தான் அப்படிச் சொல்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்துவிட்டு சிவராமனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதலில் பேசினார். தனது வாழ்வியல் அனுபவங்களை எப்படி கதைகளுக்கான கருவாக பாவிக்கிறார் என்று நீண்ட உரையாற்றினார். இவர் பேசிக்கொண்டே இருந்தபோது மின்சாரத் தடை ஏற்பட்டது. குறைந்த வெளிச்சத்தின் கருமையான இருளில் ஒரு நிமிடம் ஆழ்ந்திருந்தோம். எங்கும் அமைதி பரவிக்கிடந்தது. பிறகு தடையில்லா மின்சாரம் பாயவும் நிகழ்ச்சி தொடர்ந்தது. அவருடைய கிராமம் சார்ந்த அனுபவங்களையும், அதன் தாக்கத்தில் எழுதிய கதைகளையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.
கதையில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் ஆனால் படிப்பினை (Message) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று உரையை முடித்தார். அதன் பிறகு கேள்வி நேரம் ஆரம்பமானது. அனைவருடைய கேள்விகளுக்கும் நிதானமாக பதில்கள் கூறி அவருடைய பகுதியை நிறைவு செய்தார்.
இரண்டாம் பகுதியாக "Magical Realism" பற்றி யுவன் சந்திரசேகர் அருமையாக உரையாற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவிடம் பேச்சு மற்றும் இலக்கியம் கற்றது, புனைவுக் கதைகளின் களம், அதைக் கண்டடையும் விதம், கவிதை, சாருவினுடனான மோதல் என பல விஷயங்களைத் தொட்டுச் சென்றார்.
ஒருவனுடைய கவிதை இன்னொருவனுக்குப் புரியாது எழுதியவர்களுக்கு மட்டுமே புரியும் என்று சொல்லியது என்னை வெகுவாக தேற்றியது போல் இருந்தது. ஏனெனில் கவிதைகளின் மீதான வாசிப்பில் ஆகச்சிறந்த வெகுளி நான்.
யுவனிடம் எனக்குப் பிடித்தது மற்ற படைப்பாளிகள்(பாஸ்கர், தேவதாஸ், பா ரா) பேசும் பொழுது தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து செல்வது போல் அனைவரையும் நோட்டம் விட்டார். கேள்வி கேட்பவர்களின் கண்களைக் கூர்ந்து கவனித்தார். அனைவரிடமும் இயல்பாகப் பழகினார்.
மதிய உணவிற்குப் பிறகு மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி உரையாட திரு: தேவதாஸ் முன்வந்தார். பல ரஷ்ய, ஜப்பானிய, ஜெர்மானிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பிலுள்ள கடினங்களும், மெத்தனங்களும் இந்தப் பகுதியில் தெரியவந்தது.
கேள்வி நேரத்தின்போது பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வரும் படைப்புகளின் தரம் பற்றி அனைவரும் விவாதம் செய்தார்கள். தேவையில்லாத பல கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்களோ என்று சலிப்பு ஏற்படும்படி இருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யுவன் அளித்த மறுமொழி விவாதத்தை சுவாரஸ்யமாக்கியது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இறுதி பகுதியாக "பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது எப்படி?" என்பதை விளக்க கிழக்கின் முதன்மை ஆசிரியர் பா. ராகவன் முன்வந்தார். உதவி ஆசிரியராக தனக்கு நேர்ந்த படிப்பினைகள், அனுபவங்கள் என அனைத்தையும் நகைச்சுவை இழையோட அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது. பலருக்கும் அறிமுகமான பிரபல எழுத்தாளர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினார். அவரை நெருங்கி கேட்டக் கேள்விகளுக்குப் பணிவுடன் பதில் கூறினார்.
பைத்தியக்காரன் (சிவராமன்) தனது நன்றியுரையில் பாஸ்கர், யுவன், தேவதாஸ், பா ராகவன், பத்ரி, நர்சிம் ஆகியோருக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தமிழகத்தின் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருந்த பல பதிவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரிந்து சென்ற கல்லூரித் தோழர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்வதைப் போல் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். எவ்வளவு வாஞ்சையுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைவருடைய கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. படைப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தப் பட்டறை தீனி போட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் சிறக்க வாழ்த்துக்கள்.
"முரளி" மற்றும் "சேரல்" எனக்காக வாங்கிவந்திருந்த பல புத்தகங்களை அன்புடன் தந்தார்கள். நானும் சில புத்தகங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக் கொண்டார்கள்.
கூட்டம் தொடங்குவதற்கு கால்மணி நேரம் முன்னதாக வருகிறேன் என்றால், கூட்டம் முடிந்த ஒருநிமிட நேரத்தில் கிளம்ப்பும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதன்படி புறப்படத் தயாரானேன். எனக்குத் தெரிந்த சிலரிடம் கைகுலுக்கி விடைபெற்று சிவராமனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தேன். கல்லூரி நாட்களில் படித்த ஆங்கில வரிகள் ஞாபகம் வந்தன.
எல்லா சாலைகளுக்கும் முடிவுண்டு
பயணங்கள் எல்லாம் சாலையில் தான்
பயணங்கள் முடிவுக்கு வரலாம். சில நாட்களில்
மீண்டும் தொடரலாம் - அப்பொழுது நீ
பிரபஞ்சத்தையே கண்டடையலாம், ஒரு நாள்
பிரமஞ்சம் உனக்குள் இருக்கும் - யாரோ மகராஜ்
Tuesday, September 8, 2009
இலக்கியபீடம் கலைமாமணி விக்கிரமனுடன்
(07-09-2009) சொந்த வேலை காரணமாக அலுவலகம் செல்லாததால் சித்தப்பாவையும், அக்காவின் மகன் அகிலையும் பார்பதற்காக கொட்டிவாக்கத்திற்குச் சென்றிருந்தேன்.எதிர்பாராத விதமாக அங்கு கெளதம் மேனனின் தெலுங்கு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நாகார்ஜூனின் மகனும், நடிகை ராதாவின் மகளும் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே காட்சியை எத்தனை முறை படம் எடுக்கிறார்கள். சிறிது நேரம் பார்ப்பதற்குள் வெறுத்துவிட்டது. வினோத்தும், முத்துவும் தான் ஞாபகம் வந்தார்கள். "இதையாடா நாய்களே விரும்புகிறீர்கள்" -என்று முத்துவிற்கு ஃபோன் செய்துத் திட்டினேன்.
"அப்படி இல்லைங்க மாமா, அதெல்லாம் ஒரு Perfection-னுக்காகத் தான். ஒரு கதை எழுதும் போது, 4 பேப்பர் கசக்கிப் போட்டுவிட்டு 5-வது பேப்பரில் எழுதுவது இல்லையா? அந்த மாதிரி தான்... சுவாரஸ்யமா இருக்கும் மாமா" என்று சமாதானம் கூறினான்.
பிறகு, அக்காவின் வீட்டிலிருந்து புறப்பட்டு காலச்சுவடு மற்றும் எனி இந்தியனுக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.
அப்படியே நண்பர் முரளிக்கும், சேரலுக்கும் - பா.ராகவன் எழுதிய "அலகிலா விளையாட்டு" நாவலை வாங்குவதற்காக மேற்கு மாம்பலத்திலுள்ள "இலக்கிய பீடம்" செல்ல ஆயத்தமானேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே புத்தகத்தை பொன்னேரி நூலகத்திற்காக வாங்கச் சென்றிருந்ததால் சிரமமின்றி செல்ல முடிந்தது.
முன்பு மதிய நேரத்தில் சென்றிருந்ததால் கலைமாமணி விக்ரமன் உறங்கிக் கொண்டிருந்தார். ஆகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க அவருடைய பேத்திதான் உதவி செய்தார்கள். இந்த முறை மாலை 6 மணிக்குச் சென்றிருந்ததால் அவரே எனக்கு உதவி செய்ய முன்வந்தார்.
வி: இந்த மாதிரி புத்தகங்களை யாரும் விரும்பி வாங்குவது இல்லையே?
கி-பி: இந்த நாவல் தொடராக வந்த போது பொன்னேரி நூலகத்தில் படித்திருக்கிறேன். நூலகருக்குத் தெரியாமல் திருடி, பைண்டிங் செய்து என்னுடைய சொந்த நூலகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீண்ட நாட்களாக இந்த நாவலை கடைகளில் தேடி, எங்குமே கிடைக்காததால் பா. ராகவனிடம் இ-மெயில் விசாரித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களிடம் வாங்கியிருக்கிறேன்.
இப்பொழுது என்னுடைய நண்பர்களுக்காக அதே புத்தகத்தை வாங்க வந்திருக்கிறேன் ஐயா.
வி: ஓ... அப்படியா. இங்க பாருங்கோ புத்தகத்தை மட்டும் திருடலாம், படிப்பதற்காக கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காம இருக்கலாம் தப்பே இல்லை. [இதற்கும் மேல் புரிய வேண்டுமெனில் இங்கு படியுங்கள்:
எங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்]
கி-பி: இல்லங்க ஐயா, பொன்னேரி நூலகத்திற்கு அந்த நாவலை வாங்கிக் கொடுத்துவிட்டேன். அப்படியே, நான் திருடியதால் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்ற விஷயத்தையும் சொல்லிவிட்டேன்.
வி: நல்லது நல்லது... (சிரித்துக் கொண்டே சொல்கிறார்), உங்களுடைய ஊர் எது?
கி-பி: கும்மிடிப்பூண்டி போகும் வழியில், பொன்னேரி அருகிலுள்ள சிறிய கிராமம்.
வி: அப்படியா... முந்தியெல்லாம் அங்க தான் கேம்ப் போடுவாங்கோ. சென்னைக்கு அங்க இருந்துதான் குடிதண்ணீர் கூட வருது இல்லையா?
கி-பி: இப்போ எங்களுக்கே குடிக்கத் தண்ணி இல்ல, அதனால சென்னைக்கு அனுப்புறது ரொம்பவும் குறைவுதான் ஐயா.
வி: சரி, நீங்க எங்க வேலை செய்யுரிங்க?
கி-பி: சென்னைல தான் ஐயா. ஒரு சின்ன கம்பெனியில வேலை செய்யுறேன்.
வி: வெளிநாட்டு கம்பெனியில வேலை செஞ்சா நிறைய சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. என்னுடைய பேத்தி கூட பெங்களூர்ல இருக்குற IBM-ல வேலை செய்யறா. நெறைய சம்பளம் வாங்குறதா சொல்றா.
கி-பி: ஆமாங்க ஐயா. அவங்க சொல்றது உண்மைதான். அந்த மாதிரி கம்பெனிகளில் வேலை செய்தால் சில நேரங்களில் வெளி ஊருக்கு அனுப்புவாங்க. நைட் ஷிபிட் வேலை வரும். அதெல்லாம் எனக்கு சரிவராது. அதனால்தான் எனக்கு சரிவரும் கம்பெனிகளில் வேலை செய்கிறேன். ...
வி: "சரி இருங்க... புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று குனிந்து நிமிர்ந்து அலமாரியிலுள்ள புத்தகத்தைத் தேடுகிறார்.
கி-பி: ஐயா நீங்க உட்காருங்கள். நான் தேடி எடுத்துக் கொள்கிறேன்.
வி: "இருப்பா, இங்க தான் இருக்கும்..." என்று இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். (மேலும் சில புத்தகங்களையும், இரண்டு இதழையும் கையில் கொடுத்தார்.) இதெல்லாம் கூட நல்லா இருக்கும் படிச்சிப் பாருங்க.
கி-பி: உங்க கையில இருக்குற எல்லா புத்தகத்தையும் எடுத்துக்குறேன். பில் போட்டுடுங்க.
**********
கி-பி: சரிங்க ஐயா, நீங்க இதழ் நடந்துறீங்க இல்ல. யாரு Proof Read பாக்குறது?
வி: நான் தான் பார்க்கிறேன். ஒரு Assistant இருக்காங்க.
கி-பி: இந்த வயசுல உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?
வி: பிடிச்ச வேலைதான அதுல என்ன கஷ்டம். ஆனால் Proof Read பண்ணுறத ஆங்கிலத்தில் "Devil"-னு சொல்லுவாங்க. அதுக்கு "Ghost"-ன்னு அர்த்தம் இல்ல. எழுத்துப் பிழை மோகினி மாதிரி மயக்கிடும். ஒருத்தர் கண்ணுக்கு மட்டுமே தெரியாது. சின்ன தப்பு வந்தாலும் போச்சு. அமுத சுரபியில 52 வருஷம் வேலை செய்திருக்கிறேன். 'மு'-னாவுக்கு பதில் 'லு'-னா தெரியாம வந்தாலும் போச்சு. "அலுத சுரபின்னு" ஆயிடும். அந்த அனுபவம் கைகொடுக்கிறது. அப்போ எல்லாம் அச்சுல கோர்த்து பிரிண்ட் பண்ணனும். ரொம்ப கவனம் தேவைப்படும். இப்போதான் பிரிண்டிங் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதே. கடந்த பல வருஷங்களா "இலக்கிய பீடம்" நடத்திட்டு இருக்கேன். ஒரு சில படைப்பாளிகள் அறிமுகம் ஆகி இருக்காங்க. அதில் பா. ராகவனும் ஒருவர்.
கி-பி: இலக்கிய பீடத்தில் அவர் பரிசு பெற்ற நாவல் ஏன் சந்தையில் பரவலாக கிடைக்கவில்லை? அவருக்கு தான் சந்தையில் நல்ல பெயர் இருக்கிறதே?
வி: பரிசு கொடுக்கும் போதே நாவலின் முதல் பதிப்பு இலக்கிய பீடத்தில் தான் வெளிவர வேண்டும் என்று கையொப்பம் வாங்கி விடுவோம். அவர் பரிசு பெற்ற இரண்டு வருடம் கழித்துத்தான் அந்த நாவலை புத்தகமாகப் போட முடிந்தது. நாவல்கள் விற்றுத் தீர்ந்ததும் அவர் விரும்பும் பதிப்பகத்தின் மூலம் நாவல் சந்தையில் கிடைக்கலாம்.
இன்னுமா புத்தகம் விற்றுத் தீரவில்லை. நான் புத்தகமாகப் போட்டுக் கொள்ளட்டுமா என்று ராகவன் கடிதம் எழுதியிருந்தார். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன். என்னிடம் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அது தீர்ந்ததும் அவரிடம் சொல்லிவிடுவேன். பிறகு அவரின் மூலம் சந்தையில் கிடைக்கும்.
கி-பி: உங்களுடைய இலக்கிய இதழ் நிறைய பேருக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மார்க்கெட்டிங் செய்யவில்லை?
வி: நாங்கள் நூலகங்களுக்கு கொடுக்கிறோம் மற்றபடி வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. ஆகவே மார்க்கெட்டிங் தேவையில்லை.
கி-பி: ஏன் ஐயா இப்படி சொல்கிறீர்கள். காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய பத்திரிகைகளுக்கு ஆர்வலர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறதே. நீங்களும் அவர்களைப் போல் ஓரளவிற்கு வெகுஜனப்படுத்தி இருக்கலாமே? நிறைய படைப்பாளிகள் வெளியில் வருவார்கள் இல்லையா?
வி: நீங்கள் சுட்டிய இதழ்களை இலக்கிய இதழ்கள் என்று சொல்லாதீர்கள். அவற்றில் படைப்பாளிகளின் பேட்டி வருகிறது. வேறு என்ன இருக்கிறது? ஏன் தொடர் கதைகள் வருவதில்லை? நல்ல தரமான சிறுகதைகள் வருவதில்லை? இப்போ இருக்கறவங்க Internet-ல என்ன கிடைக்குதோ அதை மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தமிழில் எழுதறாங்க. யாராவது நாவல் அல்லது தொடர் கதை எழுதறாங்களா?
கி-பி: நீங்கள் கூட நாவல்கள் எழுதி இருக்கிறீர்களே...
வி: ஆமாம்...ஆமாம்... கிட்டத்தட்ட 60 நாவல்கள். அதில் நான்கு சமூக நாவல்கள் மற்றவை அனைத்தும் வரலாற்று நாவல்கள்.
கி-பி: வரலாற்று நாவல் எழுதுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?
வி: அதற்கு முதலில் வரலாற்று பரிச்சயம் வேண்டும். கூடவே அதிகமான கற்பனை இருக்க வேண்டும். நாவலுக்கு வடிவம் இருக்கிறது அதனையும் கவத்தில் கொள்ளவேண்டும். இல்லையெனில் நாவல் வெற்றி பெறாது.
கி-பி: நீங்கள் தான் வருட வருடம் ஒரு நாவலைத் தேர்வு செய்து பரிசு வழங்குகிறீர்களே.
வி: கடந்த ரெண்டு வருஷமா கொடுக்கறது இல்லை. எனென்றால் நல்ல படைப்புகள் எங்களுக்கு வரவில்லை. கொடுக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த வருடம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீண்ட காலம் கழித்து இரண்டு நாவல்கள் தேர்வாகி இருக்கின்றன. நவம்பரில் வெளிவரும்.
நான் கண்டிப்பாக நவம்பரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருத்து கிளம்பினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "இந்தாங்க இந்த புத்தகம் உங்களுக்குத் தான் வச்சுக்கோங்க" என்று அவருடைய சிறுகதைப் புத்தகம் ஒன்றைக் கையில் கொடுத்தார்.
"ஐயா நான் இதுக்கும் காசு கொடுத்துடரேனே...."என்று கூறினேன். "இல்ல நீங்க வச்சுக்கோங்க" என்று அன்புடன் கொடுத்தார்.
என்னுடைய வயது போல் இரண்டு மடங்கு பத்திரிகைத் துறை அனுபவம் இருக்கிறது. கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவருடனிருந்த அத்தனை நேரமும் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
யாருக்கேனும் நாவல் எழுதும் திறமை இருந்து அதனைப் பதிப்பகங்களுக்கு அனுப்ப விரும்பினால் தவறாமல் இலக்கிய பீடத்திற்கு அனுப்பலாம். அவர்களுடைய முகவரி...
இலக்கியபீடம் - மாத இதழ்
கலைமாமணி விக்ரமன்
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033
தொலைபேசி : 9144-23712485
Monday, August 24, 2009
இப்படியும் ஒரு சந்திப்பு...
இரண்டு பாஸ்போட் சைஸ் ஃபோட்டோவை பாக்கெட்டில் வைக்கும்போதே கனகராஜை சந்திக்கும் போது அவனுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். கனகராஜை மதியம் இரண்டு மணிக்கு மேல் சென்னை சென்ட்ரலில் சந்திப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்குள் நண்பனின் குடும்பத் திருமணத்திற்குச் சென்று, அங்கிருந்து தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இரண்டு ஃபோட்டோக்களை ஒட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது அவனுக்கு. மதியம் வரை வகுப்பு வேறு இருக்கிறது. அவன் வகுப்பிலிருந்து சீக்கிரமே புறப்பட்டுவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். இல்லையெனில் கனகராஜைப் பார்க்க முடியாது.விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. கனகராஜை கிருஷ்ணனுக்கு முன்பின் தெரியாது. அவர்களுக்கிடையிலான ஒரு வாரகால இ-மெயில் தொடர்பு மட்டுமே சந்திப்பிற்கான காரணமாக இருந்தது.
அவர்களுக்கு இடையிலான இ-மெயில் பரிமாற்றம் சுவாரஸ்யம் நிறைந்தது. முதலில் கனகராஜ் தான் கிருஷ்ணனுக்கு இ-மெயில் அனுப்பி இருந்தான்.
அன்புள்ள கிருஷ்ணபிரபு சார்,
நான் கனகராஜ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் BCA இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் இணையத்தில் கோவில்களைத் தேடும்போது உங்களுடைய "இந்திய நேபாள சுற்றுலா" பதிவினைக் கண்டேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் 23/08/2009 அன்று சென்னைக்கு வருகிறேன். உங்களைப் பார்க்க முடியுமா?
உங்களுடைய முடிவை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
R. கனகராஜ் (RK) ஈரோடு
18-08-2009
வந்திருந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய மருமகன் வினோத்திற்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினான்.
என்ன மாமா? சின்ன பையன் ஆசைபடுறான். ஓய்வாயிருந்தா போய்ப்பாருங்க என்று அவனால் முடிந்த வரை சொல்லிப்பார்த்தான்.
"இல்லடா..வந்து...சரியா வருமாடா வினோத்?" - என்று கிருஷ்ணன் முனகினான்.
எல்லாம் ஒரு அனுபவம் தானே. சும்மா போயிட்டு வாங்க மாமா. வந்து அனுபவத்தை சொல்லுங்க மாமா.
வினோத்துடன் பேசிவிட்டுத்தான் கனகராஜின் இ-மெயிலுக்கு கிருஷ்ணன் பதிலளித்தான்.
அன்புள்ள கனக்கு,
நலம் தானே நண்பரே? உங்களுடைய மின்னஞ்சல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்களுடைய சென்னை வருகையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். 23/08/2009 - அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எனக்கு வகுப்பு இருப்பதால் மதியமாக சந்திக்கத் தயார்.
நீங்கள் பேருந்தில் வருகிறீர்களா அல்லது ரயில் வண்டியில் வருகிறீர்களா?
உங்களுடைய பயண நோக்கம் என்ன? ஏதாவது நேர்முகம் அல்லது இதர முக்கியமான விஷயம் என்றால் தயவு செய்து அதில் கவனம் செலுத்துங்கள். நான் ஒரு சாதாரண சக மனிதன். ஆயிரமாயிரம் பேர் பதிவிடுகிறார்கள் அவர்களில் நானும் ஒருவன். அவ்வளவே.
மேலும் என்னை சந்திக்கும் ஆர்வம் எதனால் வந்தது? ஆன்மிகம் தான் காரணம் என்றால் அதை விளக்கும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உங்களுடன் கதைக்க வந்தால் சரியாக இருக்குமா?
எனக்கு உங்களுடைய புகைப்படம் அனுப்பிவிடுங்கள் உங்களை சந்திக்கும் பொழுது கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். இல்லையெனில் அந்தக் கலர் ஷர்ட்...இந்தக் கலர் ஃபேண்ட் என ஒரே குழப்பமாகிவிடும்.
உங்களுடைய பயண நோக்கம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி...
கிருஷ்ணப்பிரப்பு,
சென்னை,
18-08-2009
இந்த இ-மெயிலைப் பார்த்து ஞாயமாக அவன் ஓடி இருக்க வேண்டும். ஆனால் பதில் எழுதி இருந்தான்.
அன்புள்ள கிருஷ்ண பிரபு சார்,
உங்களுடைய பதிலுக்கு நன்றி. தயவு செய்து என்னை 'கனக்கு' என்று அழைக்காதீர்கள். என்னுடைய பாட்டிதான் அப்படி அழைப்பார்கள். முழுப் பெயரையும் பயன்படுத்துங்கள்.
இந்த இ-மெயிலுடன் எனது புகைப் படத்தையும் இணைத்துள்ளேன். நண்பருடைய திருமணத்திற்காக சென்னை வருகிறேன். ஆகவே இதர வேலைகள் எனக்கு இல்லை. 23-08-2009 மதியம் 3.15 மணிக்கு என்னுடைய ரயிலை சென்னை சென்ட்ரலில் நான் பிடிக்க வேண்டும். அதற்கு முன் உங்களை சந்தித்தால் நன்றாக இருக்கும்.
R. கனகராஜ் (RK)
ஈரோடு
19-08-2009
இந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கண்கள் இருண்டது கிருஷ்ணனுக்கு. கல்லூரி வாழ்க்கையில் கணக்குப் பரீட்சையில் முட்டை வாங்கி இருக்கிறான். ஆனால் இப்பொழுது 'கனக்கு' என்ற வார்த்தையை எழுதியே முட்டை வாங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. அதற்குப் பிறகும் இரண்டு மெயில்களை பரிமாறிக் கொண்டார்கள் இருவரும்.
அதில் "கட்டற்ற மென்பொருள்" என்ற புத்தகம் உங்களுக்குப் பயன்படுமெனில் வாங்கித் தரட்டுமா என்று கனகராஜிடம் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அந்த புத்தகத்தை எழுதியவரின் திருமணத்திற்குத்தான் நான் சென்னை வரப்போகிறேன் சார். அவருடன் ஒருமாத காலம் நான் சென்னையில் இருந்து உபுண்டு மொழிபெயர்ப்பில் உதவி செய்திருக்கிறேன் என்ற பதில் கிருஷ்ணனுக்கு வந்திருந்தது. சதுரங்க ஆட்டத்தில் யாணை, குதிரை, மந்திரி என பலரும் படைதிரட்டிக்கொண்டு வந்து ராஜாவிற்குச் செக் வைப்பது போல கனகராஜும் ஏதோ ஒரு விளையாட்டை கண்ணுக்குத் தெரியாமல் விளையாடுவதுபோல் இருந்தது கிருஷ்ணனுக்கு. எனினும் அவன் அனுப்பிய கடைசி மெயிலில் கனகராஜை சந்திப்பதை உறுதி செய்திருந்தான்.
அதன்படி, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சீக்கிரமே சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிட்டதால் ஹிக்கின் போத்தம் புத்தகக் கடையில் துணையெழுத்து, ராஜாஜியின் ராமாயணம், காண்டேகரின் சிறுகதைகள், லா. சா. ராவின் கழுகு ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு காத்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். அரைமணி நேர காத்திருப்பிற்குப் பின் கனகராஜ் வந்திருந்தான்.
எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டபடியே கனகராஜை நெருங்கினான் கிருஷ்ணன்.
"எதுவும் வேணாம் சார். இருக்கறது கொஞ்ச நேரம் அதுல உங்க பயணத்தைப் பற்றி பேசலாமே...." என்றான் கனகராஜ்.
முதலில் சார் சார் என்று சொல்வதை நிறுத்துங்க...எனக்கு ஒரு மாதிரி இருக்குது. பயணத்தைப் பற்றி பேசறதுக்கு என்னப்பா இருக்கு! சரி, எதாச்சும் ஜூஸ் குடி... என்றபடியே பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு இருவரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நிற்கும் ஐந்தாவது பிளாட்பாரம் நோக்கி நடந்தார்கள். அங்கிருக்கும் பிளாட்பார இருக்கையில் அமர்ந்து மாதுளை ஜூஸை குடித்துக் கொண்டே பேச ஆயத்தமானார்கள்.
உலகில் உள்ள எல்லா இடங்களுமே புனிதமான இடங்கள் தான். நான் சென்ற இடங்கள் மட்டும் புனித இடங்கள் அல்ல. கிறித்துவர்களுக்கு வாடிகன், முஸ்லிம்களுக்கு மெக்கா, இந்துக்களுக்கு காசி, கயை, கைலாயம் என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிறகு நான் ஏன் செல்ல வேண்டுமென்றால் அந்த இடங்கள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள். நம் மூதாதையர்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இடங்கள் .
நான் பிரயாகையில் முண்டம் அளிக்கவில்லை, கயையில் பிண்டம் அளிக்கவில்லை, காசியில் புனித நீராடவில்லை...நன் ஒரு பார்வையாளனாகவே அந்தப் பயணத்தில் செயல்பட்டேன். மொத்தப் பயணத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம் எவரஸ்ட் சிகரத்தைப் பார்த்ததும் போக்ராவில் காலாற நடந்ததும் தான் என்று விளக்கிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.
உப்புசப்பு இல்லாத உப்புமாவை விருந்தாளிக்கு வைப்பது போல் தயக்கத்துடனே தனது அனுபவங்களை சொல்லிக்கொண்டு இருந்தான் கிருஷ்ணன். தீராத பசி கொண்ட தேவர்கள் அமுதத்தை கண்ணால் பார்த்தே பசியாருவதைப் போல கனகராஜும் ஒவ்வொரு வார்த்தையையும் தனது செவிகளில் வாங்கி தின்றுகொண்டிருந்தான்.
"எனக்குக் கூட புனித தளங்களுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை, அதைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பேசினால் கேலி செய்கிறார்கள்" என்று கனகராஜ் கூறினான்.
நீங்க செய்யறது தப்பு கனகராஜ். உங்களுக்குப் பிடித்த விஷயம் அவங்களுக்கும் பிடிக்கணும் என்ற அவசியம் இல்லையே. சரி... நான்கு வருடங்களில் நான் கைலாயம் செல்லலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். போகும்போது உங்களிடம் தெரிவிக்கிறேன். முடிந்தால் என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
அண்ணா, எனக்கு மென்பொருள் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று ஆசை. பிறகு குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று ஆசை. சுற்றுப்புற சூழலுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று ஆசை. இந்த மாதிரி உங்களுக்கு என்ன செய்யனும்னு ஆசை?
உங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். பெருசா சாதிக்கணும்னு எதுவும் இல்லை. அப்படி எதாச்சும் செய்ய வேண்டுமென்றும் நினைத்ததில்லை.
சிறுவயதில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஏரோபிளேன் ஓட்ட வேண்டும், எஞ்சினியர் ஆகவேண்டும், கிடார் வாசிக்க வேண்டும்... என்று பல ஆசைகள் இருந்ததாம். பெருவாரியான ஆசைகளை நிறைவேற்றியும்விட்டார். ஆனால் காலையில் எழுந்து சிரமமில்லாமல் கக்கூஸ் போவதையே தனது வயோதிககால சந்தோஷமாகக் கூறுகிறார். பெரிய சாதனை, பெரிய சந்தோசம் என்பது நம்ம செய்யற சின்ன சின்ன விஷயங்களிலேயே நிறைய இருக்கு. அத அனுபவிச்சாலே போதுமே என்று கிருஷ்ணன் கூறினான்.
சரி... உனக்காக நான் எஸ். ரா எழுதிய துணையெழுத்து வாங்கி வந்திருக்கேன். நீ படிக்கனும்னு நான் சொல்லமாட்டேன். படித்தால் எனக்கு சந்தோஷமே. எனக்கும் சில புத்தகங்கள் வாங்கி இருக்கேன் பார்கிறாயா?
கொடுங்க அண்ணா...ஹை! இது என்ன ராமாயணம் என்று அவனுடைய முகம் முழுவதும் சந்தோஷக் கலை தாண்டவமாடியது.
அந்த ராமாயணம் ராஜாஜி எழுதியது கனகராஜ். நீங்க கவர்னரா இருந்து இருக்கீங்க, முதல்வரா இருந்து இருக்கீங்க, இன்னும் பல உயரிய பதவியில் இருந்து இருக்கீங்க.... உங்களோட வாழ்க்கையிலேயே நீங்கள் எதற்காக சந்தோஷப்பட்டீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ராமாயண மகாபாரத்தை எழுதிய போதுதான் நான் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன் என்று பதில் சொல்லியிருந்தாராம்.
ஆகவே சுவாரஸ்யமாய் இருக்கும். நீயே எடுத்துக்கோ. நான் வேற வாங்கிக்கிறேன் என்று அவனுக்கே கொடுத்துவிட்டான்.
அண்ணா, உங்களுக்கு இதெல்லாம் எப்படி அண்ணா தெரியுது?
நீ எதை கேக்குற கனகராஜ்.
இல்லங்க அண்ணா, அத எப்படி சொல்றதுன்னு தெரியல...
நான் ரொம்ப மந்தமானவன். எனக்கு எதுவும் தெரியாது...கனகராஜ் உங்க ரயில் புறப்படுது கலம்புங்க...கலம்புங்க... ரயிலின் நகர்வு இருவரையும் பிரித்தது இருந்தாலும் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டார்கள்.
ஐயோ... ரயில் போயிடுச்சே. கனக்கு...கனக்கு... உன்கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு நெனச்சேனே! கத்தியவனின் கோரிக்கையை ரயிலின் ஜிகு புகு சத்தம் நிதானமாக விழுங்கியது. அதற்கும் கனகராஜ் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டிருந்தான்.
Saturday, August 15, 2009
சுந்தர ராமசாமி - 'நீ யார்' ஆவணப்படம்
சுந்தர ராமசாமி... தன் படைப்புகள் மூலமும், காலச்சுவடு மாத இதழ் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமும் தனக்கென ஒரு தனி இடத்தையும் பெரும் தாக்கத்தையும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியவர் . இளம் படைப்பாளிகளின் ஆதர்ஷனங்களில் அவரும் முக்கியமானவர் என்றே கூற வேண்டும். அவரைப் பற்றிய "நீ யார்" என்ற ஆவணப்படத்தை அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சாம்பாரில் இன்று (16-08-2009) காலை 10 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாக எழுத்தாளர் திரு: ஞானி அவர்களின் மூலம் தெரிய வந்தது.சரியாக காலை 10.05-ற்கு அரங்கத்தினுள் சென்றேன். நிறைய கலைத் துறையை சேர்ந்தவர்கள் வெளியில் நின்றுகொண்டு இருந்தார்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். தனியாளாக சென்றதால் யாரிடம் பேசுவது என்று தயக்கமாக இருந்தது. ஒருவரிடம் இங்கு தானே சு. ரா-வைப் பற்றிய ஆவணப்படம் திரையிடுகிறார்கள் என்று கேட்டேன். அவரும் "ஆம்" என்றார்.
swine flue - பீதி காரணமாக முகம் மற்றும் கைகளை அலம்பிவிட்டு மீண்டும் அவரையே கடந்து சென்றேன். என்னை இடை மறித்து "நீங்கள் தானே கிருஷ்ண பிரபு?" என்று கேட்டார். ஆச்சர்யமாக இருந்தது. "என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றேன். நீங்கள் எனக்கு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். என் பெயர் விஷ்ணு குமார் என்று கூறினார்.
யாருமே துணைக்கு இல்லையே என்று நினைத்த எனக்கு இவரின் அறிமுகம் ஆறுதலாக இருந்தது. உங்களுடன் நான் அமர்ந்து கொள்வதில் பிரச்சனை இல்லையே என்று கேட்டவாறு அவருடன் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் ரமணியின் வரவேற்புரையுடன் திரையிடல் ஆரம்பமானது.
"நம்மால் இயன்ற காரியங்களை உண்மையுடனும், பொது நலத்துடனும் செய்தால் உரிய காலத்தில் சில மாற்றங்களைக் காண முடியும். தமிழ் சமுதாயத்தில் எழுத்தாளர்கள் நல்ல சக்தியாக வர வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று மொழி, நடை, பார்வை, அவதானிப்பு உருவாக வேண்டும்.சுயத்தைக் காப்பாற்றும் சூழல் ஏற்பட வேண்டும். எந்த சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுகிறதோ அந்த சமூகமே மதிப்பினைப் பெரும்" என்ற முழக்கங்களுடன் சுந்தர ராமசாமி திரையில் தோன்றினார்.
சு.ராவின் கவிதைகள், ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ குறித்துப் பலரும் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் சு ராவின் படைப்புகள் மீதான விமர்சனம் ரசிக்கும்படியாக இருந்தது.
சுரா Sun TV, Asianet TV போன்ற தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளும், அவருடைய குறிப்பிட்ட மேடைப் பேச்சுகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெறுகின்றன.
நாராயணன், R.V. ரமணன், N.சுகுமாரன், அசோகமித்திரன், ஆற்றூர் ரவிவர்மா, சலபதி, தியோடார் பாஸ்கர், ஞானி, பாலுமகேந்திரா, விஷ்ணு மதூர், பால் சகரியா, ராஜ மார்த்தாண்டம், மனுஷபுத்திரன், கோகுலக் கண்ணன், அருணா சாய்ராம், புதுவை இளவேனில், யுவன் சந்திரசேகர் முதலானவர்கள் அவரது அனுபவங்கள், படைப்புகள் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள் ஆவணப் படத்திற்கு அழகு சேர்கின்றது.
"புதுவை இளவேனில்" - சுந்தர ராமசாமியை புகைப்படம் எடுத்தவர். புகைப் படம் எடுக்கும் போது அவருக்கு இருந்த மகிழ்ச்சியான மன நிலையையும், அவர் கொடுத்த ஒத்துழைப்பையும் அனுபவித்துப் பேசினார்.
"அருணா சாய்ராம்" - இவருடைய தீவிர விசிறியாம் சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்ற நாவலை அவருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். அவருடைய அன்பு மனைவி கமலா அருணா சய்ராமிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
பள்ளி மாணவிகளுக்கு அவர் அளித்த பேட்டி வித்யாசமான சுந்தர ராமசாமியைப் பார்க்கும் படியாக இருந்தது. மாணவிகளுடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ரசிக்கும்படியாக இருந்தது.
இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சு.ராவின் மரணமும், அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் மனதை உலுக்குவதாக இருந்தது. அதற்குப் பிறகு அவருடைய குடும்பத்தார் சுந்தர ராமசாமியின் பிறந்த இடம், வளர்ந்த இடம் என பல விஷயங்கள் விரிவாகக் காட்டப்படுகிறது. சு. ரா-வைப் பற்றிய அவருடைய இளைய பேரனின் நினைவுகள் அருமையிலும் அருமை. மழலைக்குரலில் மாறாத அன்புடன் அவன் பகிர்ந்துகொள்ளும் விதம் ரசிக்க வேண்டிய ஒன்று.
தனது மறைவிற்குப் பிறகு சடங்குகள் வேண்டாம் என்று சுந்தர ராமசாமி சொல்லிவிட்டாராம். ஆகவே அவர் விருப்பப்படி இறுதி மரியாதை செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் அதைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஆவணப்படம் போல் இல்லாமல் இயல்பாக படமாக்கியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்துமே அருமை. R.V ரமணணின் நீண்ட கால உழைப்பு இதில் இருக்கிறது.
தூர்தஷனுக்காக அரைமணி நேரம் எடுக்கப் பட்ட இந்த ஆவணப்படத்தின் தணிக்கை செய்யப் படாத இரண்டு மணி நேர [சந்திப்பில் ஒளிபரப்பப்பட்ட] குறுந்தகடு விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. இயக்குனர் R.V.ரமணணிடம் தொடர்பு கொண்டால் 'நீ யார்' குறுந்தகடை விலைக்கு வாங்கலாம்.
Details:
NEE YAAR – Who are you?
Duration: 120 minutes
Tamil, Malayalam, English (Subtitled in English)
Directed, Photographed and Edited by RV Ramani
Produced by Public Service Broadcasting Trust & Prasar Bharati
Address:
R.V. Ramani [Director & photojournalist]
L-1/3, First Floor,
28th Cross, Besant Nagar,
Chennai 600090. India
Website: www.ramanifilms.com
E-mail: ramanirv@hotmail.com
Monday, August 10, 2009
இலக்கியமும் சினிமாவும் - கேணி இலக்கிய சந்திப்பு
இயக்குநர் பாலு மகேந்திரா - கேணி இலக்கிய சந்திப்பு
அழகிரிசாமி சாலையில் அரைமணி நேரம் அலைந்து திரு:ஞானியின் வீட்டைக் கண்டுபிடித்தேன். 4.10 மணிக்கு சந்திப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சரியாக மாலை 4.30 மணிக்கு திரு: பாலு மகேந்திரா ஞானியின் வீட்டிற்கு வந்தார். 10 நிமிட உரையாடலுக்குப் பிறகு 4.40- ற்கு கூட்டம் நடக்க இருக்கும் இடத்திற்கு ஞானி அவர்கள் திரு:பாலுமகேந்திராவை அழைத்துக் கொண்டு வந்து வாழ்த்துரையோடு 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' என்ற தலைப்பில் உரையாட இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தினார். மேலும் கேள்வி நேரத்தின் போது தேவையில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
திரு: பாலுமகேந்திரா வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதைச் செலுத்தினோம். Please sit, Please sit என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் "இந்த சந்திப்பு கிணற்றடியில் நடப்பதால் மகிழ்ச்சியுடன் வருவதற்குச் சம்மதித்தேன்" என்று கூறினார்.
மேலும் இந்த கம்பீரமான சூழலில் கலந்துரையாட வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிப்படையில் நான் இலக்கிய உபாசகன். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல்கள் ஆகிய இலக்கியம் சார்ந்த படைப்புகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னை ஆக்ரமித்த விஷயங்கள். அந்த வகையில் சினிமா என்னுடைய இரண்டாவது காதலி. தீவிர வாசகனாக இருந்ததால், இருப்பதால் 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' எனற கலந்துரையாடல் எனக்கு உடன்பாடான தலைப்பே. மேலும் நான் அதிகம் பேச விரும்புவதும் கூட.
என்னிடம் உதவியாளராக சேர ஒரு சிலர் விரும்புகிறார்கள். அப்படி வருபவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் கடைசியாக வாசித்த புத்தகம் என்ன?" என்பதுதான். அது சிறுகதையோ! நாவலோ! எதுவாக இருப்பினும் அதில் "உங்களை பாதித்த விஷயம் என்ன?" என்று கேட்பேன்.வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களை உடனே அனுப்பி விடுவேன்.
ஆனால், சிலரிடம் ஒரு பொறி இருக்கும் அவர்களிடம் சில புத்தகங்களைக் கொடுத்து படித்துவிட்டு வருமாறு கூறுவேன். அதன் பின் அவரைப் பற்றி முடிவு செய்வேன்.அப்படிப்பட்ட சிலர், நான் வாசிக்கப் பழக்கப் படுத்திய நபர்கள் என்னையே மிஞ்சும் அளவிற்குப் படித்துவிட்டு, "இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டீர்களா?" என்று எனக்குப் பரிந்துரை செய்வார்கள். அந்தத் தருணங்களில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இருதய வலியால் நான் சாக வேண்டியது. உறவுகளால் பிழைத்தேன். பிழைத்ததால் இங்கு இருக்கிறேன். இல்லையேல் பாலு மகேந்திராவுடனான இந்தச் சந்திப்பு சாத்யமில்லை. ஆகவே இருக்கும் காலத்தில் நான் கற்றுக் கொண்டதை என்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்கிவிட்டுப் போக ஆசைப்படுகிறேன்.
1999 -ல் (Nearly 10 years back), சன் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து 52 வாரங்களுக்கான நெடுந்தொடர் (TV Episode) எடுக்க வேண்டி அழைப்பு வந்திருந்தது. "என்ன செய்யலாம்?" என்று யோசிக்கும் போது, மூத்த படைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகளை Short Pictures மாதிரி தரலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பதின் பருவத்திலிருந்து நான் வாசித்த சிறந்த கதைகளை மீள் வாசிப்பு செய்தேன்.
மீள் வாசிப்பு ஒரு அலாதியான அனுபவம். ஆரம்ப காலங்களில் நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய படைப்புகள்... மீள் வாசிப்பில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. சுமார்ரகம் என்று நான் நினைத்தப் பல படைப்புகள் சிறந்த படைப்புகளாகத் தெரிந்தன.
பொதுவாக ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கிறது, எழுத்தாளர்களுக்குக் கூட அது இருக்கிறது. அது என்னவெனில் எழுதும் அனைத்தையுமே சினிமாவாக எடுத்துவிடலாம் என்பது. இது மிகவும் தப்பான ஒரு அபிப்ராயம்.
"நீங்கள் சுமாரான கதையை எடுத்துக் கொண்டு அதை நன்றாக எடுத்துவிடுகிறீர்கள். ஆனால் சிறந்த கதைகளை நீங்கள் ஏன் படமாக்குவதில்லை" என்று என்னிடம் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள் அல்லது நட்புடன் கேட்கிறார்கள். அதற்கு நான் பல இடங்களில் பதில் சொல்லி இருக்கிறேன்.
உதாரணமாக, சுஜாதா ஒரு கதை இப்படி ஆரம்பிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்,
"ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருந்தாள். ஊரில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து அவளுடைய வீடு ஊரைவிட்டு சற்றுத் தள்ளி இருந்தது. அவள் அம்மா அவளைத் திட்டியதால் வீட்டிற்குப் பின்னால் சென்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்..." - இதில் எதை நான் படமாக்குவது...
சுஜாதா மட்டுமல்ல லா. சா. ரா, சு. ரா, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன்... இன்னும்... இன்னும் நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன், பெரிய வணக்கத்துடன் கூடிய மரியாதை செய்து அந்த சிறந்த கதைகளை ஒதுக்கி வைத்திருக்கிறேன். அவற்றை சினிமா எடுக்க இயலாது.
இங்கு எழுத்து என்பது ஒரு ஊடகம்(Media), சினிமா என்பது ஒரு ஊடகம்(Media), இரண்டுமே தொடர்பு சாதனங்கள். ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் போகும்போது சில விஷங்களை கவனிக்க வேண்டும். அவற்றில் சாதகமான விஷயங்கள், சாதகமில்லாத விஷயங்கள் இரண்டையும் அலச வேண்டும். அப்படி சாத்திய அசாத்தியங்களைப் புரிந்து கொண்டாள் தான் நல்ல படைப்பு கிடைக்கும்.
இந்த இடத்தில், "படைப்பிற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் என்ன?" என்று அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
Culture, Feeling, Subject, Concept - என்று பலவாறு பதில் சொன்னோம். சரியான பதில் வரும் வரை எங்களை விடவில்லை. வந்திருந்த ஒருவர் Form & Content(Subject) என்ற சரியான பதிலைச் சொன்னார்.
Exactly...அந்த இரண்டும் தான் முக்கியம் என்று அவரைப் பாராட்டினார். உருவம் (Form) மற்றும் உள்ளீடு (Content) இந்த இரண்டும் தான் படைப்பிற்கு முக்கியம்.
ஏசுநாதரின் ஓவியத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன் எத்தனையோ ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். மறுபடியும் வரைய என்ன இருக்கிறது என்று ஒரு படைப்பாளி நினைக்க முடியுமா?. இந்த இடத்தில் உள்ளீடு என்பது ஏசுநாதர். ஆனால் இங்கு ஓவியரின் திறமை அவர் உபயோகிக்கும் வண்ணத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். Brush Strokes வித்யாசமாக இருக்க வேண்டும். இங்கு Subject-ஐ விட Form தான் படைப்பினை முன்னிறுத்துகிறது.உன்னதமாக்குகிறது.
இந்த Subject & Form இரண்டும் பின்னிப்பிணைந்து அட்டகாசமான ஒரு வெளிப்பாடு இருக்கும் போது உன்னதமான படைப்பாக வெளிப்படுகிறது.
உதாரணமாக, பாட்டி கக்கா கதையை எடுத்துக் கொள்வோம்.
எத்தனை ஆயிரம் முறை கேட்டக் கதை. எத்தனை பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு சொன்னது. இன்னும் எத்தனைக் கோடி பாட்டிகள், எத்தனைக் கோடி குழந்தைகளுக்கு சொல்லப் போவது... What a marvelous and beautiful story. இந்தக் கதையை சினிமாவாக எடுத்தால், முக்கியப் பாத்திரம் என்ன? (பாட்டி)... எங்கு நடக்கிறது? (கிராமத்திலா வேறு எங்காவதா?)... இதனுடைய உள்ளர்த்தம் என்ன? இப்படி அலச வேண்டி இருக்கிறது. அதற்கான Sequence தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு படைப்பாளியை மதிப்பிட அவனுடைய மிகச்சிறந்த படைப்பை எடுத்துக் கொண்டு மதிப்பிட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு படைப்பும் உன்னதமான படைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் நிறைய இருக்கிறது. அவற்றிக்கு சில நேரங்களில் படைப்பாளி பலியாக நேரிடும். அந்தக் காரணிகளைப் பேச நான் விரும்பவில்லை.
ஆனால் சிறுகதையை படமாக்கும் போது... இங்குதான் ஒரு சிக்கல் வருகிறது.
ஒரு பெண் அவரைப் Photo எடுக்கும் போது Flash அவரை நனைத்தது. உடனே, தயவு செய்து Photo எடுக்காதீங்க. As a Camera Man... It will disturb me... எங்க விட்டேன்...சில நேரங்களில் நூலறுந்த பட்டம் போல எங்கோ சென்று விடுவேன்...என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது திரு: ஞானி அவர்கள் எடுத்துக் கொடுக்க மீண்டும் தொடர்ந்தார்.(சிறுகதையைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கல்...)
பாருங்க, ஒரு சிறுபெண் வெட்கம் வரும் போது பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள். அவளுக்கு தெரிந்து முகத்தில் தான் உள்ளது வெட்கம். இப்பொழுது அவளே பெரியவள் ஆகிறாள்...இப்பொழுது அவளுக்கு வெட்கம் வருகிறது, முகத்தை அதேபோல் மறைக்க முடியுமா? இப்பொழுது அவளுக்கு வெட்கம் வேறு இடத்தில் இருக்கிறது. (எல்லோரும் சிரிக்கிறார்கள்). இதுதான் ஊடக மாற்றத்தில் உள்ள சிரமம்.
நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். நான் என்னுடைய மொழியில் பேசுகிறேன். என்னுடைய மொழி சினிமா.ஒரு மொழியிலுள்ள கதையை என்னுடைய மொழிக்கு கொண்டுவரும் போது சிரமங்கள் தவிர்க்க முடியாதது.அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணிடம் காதலைதத் தெரியப்படுத்துகிறாள். அவனுக்கும் விருப்பம். ஆனால் அந்தப் பெண் ஒரு முறையிடுகிறாள். உன்னை மணந்து கொள்ள வேண்டுமெனில் "உன்னுடைய குஞ்சை அறுத்துப் போடு" என்கிறாள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்). எது ஆண்மையின் அடையாளமோ அதையே அறுத்துவிட்டு பெண்ணிடம் என்ன செய்ய... இந்தச் சிரமம் தான் சிறுகதையை சினிமாவாக எடுக்கும் போது ஏற்படுகிறது..
Here language is extremely limited.Some times we are searching for a right words. But we can't. For Ex:
நண்பருடைய தாயார் இறந்து விடுகிறார்கள். உங்களுக்கு நிறைய முறை உணவைப் பரிமாறியவர். பெற்ற பிள்ளைக்கு சமமாக உங்களையும் நடத்தியவர். இழவு வீட்டிற்குச் செல்கிறீர்கள். அந்த சோகத்தில் இருக்கும் நண்பரிடம் நீங்கள் என்ன மொழியை பேசுவீர்கள். அவரை ஆற்றுதல் படுத்த உங்களிடம் மொழியோ அல்லது வார்த்தையோ இருக்கிறதா? ஒரு தழுவலைத் தவிர.அந்தத் தழுவல் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்குச் சமம் மொழி உதிரும் இடம் இங்கு தான்.
இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம். நான் சின்னத் திரைக்காக எடுத்த கதைகளில் மாலனின் கதையும் ஒன்று. 'தப்புக் கணக்கு' என்ற சிறுகதை. மாலனின் மிகப் பெரிய விசிறி என்று சொல்லி அவருடைய எளிமை, நேர்மை, அறிவு என பல விஷயங்களைப் புகழ்ந்தார்.
மாலனின் சிறுகதை புத்தகத்தைக் கையேடு கொண்டுவந்திருந்தார். திரு ஞானி அவர்களை அந்தக் கதையைப் படிக்கச் சொன்னார். அவர் படிக்கும் போது அனைவரையும் கண்களை மூடிக் கொண்டு கதையை கேட்கச் சொன்னார். அந்த 7 பக்க கதையை படித்து முடித்ததும் அதை Script-டாக மாற்றுவதில் உள்ள சிரமத்தையும் சிரத்தையையும் எடுத்துச் சொன்னார். 7 பக்கக் கதையை 1 பக்க Script-டாக மாற்றி இருந்தார்.இங்கு திரைத் துறையில் இருந்து வந்திருந்தவர்களுக்கு முக்கியமான பல ஆலோசனைகள் வழங்கினார். அவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.
சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே போகிறார். நேரம் 7 மணியைத் தாண்டிச்செல்கிறது. அதை ஞாபகப் படுத்தவும். மாலனுடைய சிறுகதையை டிவி- ல் ஒளிபரப்பினார்கள்.T.V Color & Contrast setting -ல் பிடிவாதமாக இருந்தார். Settings சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டப் பின்னர் தான் படத்தை திரையிட அனுமதித்தார்.நீங்கள் கடையில் வாங்கும் போது இருக்கும் அதே Setting-ஐ Use பண்றீங்க. அது தப்பு. Setting சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு டிவி பாருங்கள் என்று பரிந்துரை செய்தார்.
படம் ஓடி முடிந்தது அனைவரும் கைதட்டினார்கள். இறுதியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் சினிமாவில் இறந்துகொண்டு வரும் ஒரு துறை Script Writing. எனவே நான் பேசிய இவ்வளவு மணி நேரத்தில் என்னுடைய உரையைக் கேட்டு யாரேனும் ஒரு நல்ல Script Writer பின்னாளில் வந்தால் மிகவும் மகிழ்வேன். சென்னையில் சினிமாவைப் பற்றி திறந்த மனதுடன் பேச முடியவில்லை. கேணி சந்திப்பு அந்தக் குறையை போக்கியது. நன்றி...என்று கூறி உரையை முடித்தார்.
இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நன்றியுரை கூறி கேணி சந்திப்பை நிறைவு செய்தார்.
இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:
மூன்றாவது கிணறு! - ரவிபிரகாஷ்
கேணி - இலக்கியமும் சினிமாவும்...
திரு: பாலுமகேந்திரா வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதைச் செலுத்தினோம். Please sit, Please sit என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் "இந்த சந்திப்பு கிணற்றடியில் நடப்பதால் மகிழ்ச்சியுடன் வருவதற்குச் சம்மதித்தேன்" என்று கூறினார்.
மேலும் இந்த கம்பீரமான சூழலில் கலந்துரையாட வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிப்படையில் நான் இலக்கிய உபாசகன். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல்கள் ஆகிய இலக்கியம் சார்ந்த படைப்புகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னை ஆக்ரமித்த விஷயங்கள். அந்த வகையில் சினிமா என்னுடைய இரண்டாவது காதலி. தீவிர வாசகனாக இருந்ததால், இருப்பதால் 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' எனற கலந்துரையாடல் எனக்கு உடன்பாடான தலைப்பே. மேலும் நான் அதிகம் பேச விரும்புவதும் கூட.
என்னிடம் உதவியாளராக சேர ஒரு சிலர் விரும்புகிறார்கள். அப்படி வருபவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் கடைசியாக வாசித்த புத்தகம் என்ன?" என்பதுதான். அது சிறுகதையோ! நாவலோ! எதுவாக இருப்பினும் அதில் "உங்களை பாதித்த விஷயம் என்ன?" என்று கேட்பேன்.வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களை உடனே அனுப்பி விடுவேன்.
ஆனால், சிலரிடம் ஒரு பொறி இருக்கும் அவர்களிடம் சில புத்தகங்களைக் கொடுத்து படித்துவிட்டு வருமாறு கூறுவேன். அதன் பின் அவரைப் பற்றி முடிவு செய்வேன்.அப்படிப்பட்ட சிலர், நான் வாசிக்கப் பழக்கப் படுத்திய நபர்கள் என்னையே மிஞ்சும் அளவிற்குப் படித்துவிட்டு, "இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டீர்களா?" என்று எனக்குப் பரிந்துரை செய்வார்கள். அந்தத் தருணங்களில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இருதய வலியால் நான் சாக வேண்டியது. உறவுகளால் பிழைத்தேன். பிழைத்ததால் இங்கு இருக்கிறேன். இல்லையேல் பாலு மகேந்திராவுடனான இந்தச் சந்திப்பு சாத்யமில்லை. ஆகவே இருக்கும் காலத்தில் நான் கற்றுக் கொண்டதை என்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்கிவிட்டுப் போக ஆசைப்படுகிறேன்.
1999 -ல் (Nearly 10 years back), சன் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து 52 வாரங்களுக்கான நெடுந்தொடர் (TV Episode) எடுக்க வேண்டி அழைப்பு வந்திருந்தது. "என்ன செய்யலாம்?" என்று யோசிக்கும் போது, மூத்த படைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகளை Short Pictures மாதிரி தரலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பதின் பருவத்திலிருந்து நான் வாசித்த சிறந்த கதைகளை மீள் வாசிப்பு செய்தேன்.
மீள் வாசிப்பு ஒரு அலாதியான அனுபவம். ஆரம்ப காலங்களில் நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய படைப்புகள்... மீள் வாசிப்பில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. சுமார்ரகம் என்று நான் நினைத்தப் பல படைப்புகள் சிறந்த படைப்புகளாகத் தெரிந்தன.
பொதுவாக ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கிறது, எழுத்தாளர்களுக்குக் கூட அது இருக்கிறது. அது என்னவெனில் எழுதும் அனைத்தையுமே சினிமாவாக எடுத்துவிடலாம் என்பது. இது மிகவும் தப்பான ஒரு அபிப்ராயம்.
"நீங்கள் சுமாரான கதையை எடுத்துக் கொண்டு அதை நன்றாக எடுத்துவிடுகிறீர்கள். ஆனால் சிறந்த கதைகளை நீங்கள் ஏன் படமாக்குவதில்லை" என்று என்னிடம் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள் அல்லது நட்புடன் கேட்கிறார்கள். அதற்கு நான் பல இடங்களில் பதில் சொல்லி இருக்கிறேன்.
உதாரணமாக, சுஜாதா ஒரு கதை இப்படி ஆரம்பிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்,
"ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருந்தாள். ஊரில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து அவளுடைய வீடு ஊரைவிட்டு சற்றுத் தள்ளி இருந்தது. அவள் அம்மா அவளைத் திட்டியதால் வீட்டிற்குப் பின்னால் சென்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்..." - இதில் எதை நான் படமாக்குவது...
சுஜாதா மட்டுமல்ல லா. சா. ரா, சு. ரா, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன்... இன்னும்... இன்னும் நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன், பெரிய வணக்கத்துடன் கூடிய மரியாதை செய்து அந்த சிறந்த கதைகளை ஒதுக்கி வைத்திருக்கிறேன். அவற்றை சினிமா எடுக்க இயலாது.
இங்கு எழுத்து என்பது ஒரு ஊடகம்(Media), சினிமா என்பது ஒரு ஊடகம்(Media), இரண்டுமே தொடர்பு சாதனங்கள். ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் போகும்போது சில விஷங்களை கவனிக்க வேண்டும். அவற்றில் சாதகமான விஷயங்கள், சாதகமில்லாத விஷயங்கள் இரண்டையும் அலச வேண்டும். அப்படி சாத்திய அசாத்தியங்களைப் புரிந்து கொண்டாள் தான் நல்ல படைப்பு கிடைக்கும்.
இந்த இடத்தில், "படைப்பிற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் என்ன?" என்று அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
Culture, Feeling, Subject, Concept - என்று பலவாறு பதில் சொன்னோம். சரியான பதில் வரும் வரை எங்களை விடவில்லை. வந்திருந்த ஒருவர் Form & Content(Subject) என்ற சரியான பதிலைச் சொன்னார்.
Exactly...அந்த இரண்டும் தான் முக்கியம் என்று அவரைப் பாராட்டினார். உருவம் (Form) மற்றும் உள்ளீடு (Content) இந்த இரண்டும் தான் படைப்பிற்கு முக்கியம்.
ஏசுநாதரின் ஓவியத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன் எத்தனையோ ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். மறுபடியும் வரைய என்ன இருக்கிறது என்று ஒரு படைப்பாளி நினைக்க முடியுமா?. இந்த இடத்தில் உள்ளீடு என்பது ஏசுநாதர். ஆனால் இங்கு ஓவியரின் திறமை அவர் உபயோகிக்கும் வண்ணத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். Brush Strokes வித்யாசமாக இருக்க வேண்டும். இங்கு Subject-ஐ விட Form தான் படைப்பினை முன்னிறுத்துகிறது.உன்னதமாக்குகிறது.
இந்த Subject & Form இரண்டும் பின்னிப்பிணைந்து அட்டகாசமான ஒரு வெளிப்பாடு இருக்கும் போது உன்னதமான படைப்பாக வெளிப்படுகிறது.
உதாரணமாக, பாட்டி கக்கா கதையை எடுத்துக் கொள்வோம்.
எத்தனை ஆயிரம் முறை கேட்டக் கதை. எத்தனை பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு சொன்னது. இன்னும் எத்தனைக் கோடி பாட்டிகள், எத்தனைக் கோடி குழந்தைகளுக்கு சொல்லப் போவது... What a marvelous and beautiful story. இந்தக் கதையை சினிமாவாக எடுத்தால், முக்கியப் பாத்திரம் என்ன? (பாட்டி)... எங்கு நடக்கிறது? (கிராமத்திலா வேறு எங்காவதா?)... இதனுடைய உள்ளர்த்தம் என்ன? இப்படி அலச வேண்டி இருக்கிறது. அதற்கான Sequence தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு படைப்பாளியை மதிப்பிட அவனுடைய மிகச்சிறந்த படைப்பை எடுத்துக் கொண்டு மதிப்பிட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு படைப்பும் உன்னதமான படைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் நிறைய இருக்கிறது. அவற்றிக்கு சில நேரங்களில் படைப்பாளி பலியாக நேரிடும். அந்தக் காரணிகளைப் பேச நான் விரும்பவில்லை.
ஆனால் சிறுகதையை படமாக்கும் போது... இங்குதான் ஒரு சிக்கல் வருகிறது.
ஒரு பெண் அவரைப் Photo எடுக்கும் போது Flash அவரை நனைத்தது. உடனே, தயவு செய்து Photo எடுக்காதீங்க. As a Camera Man... It will disturb me... எங்க விட்டேன்...சில நேரங்களில் நூலறுந்த பட்டம் போல எங்கோ சென்று விடுவேன்...என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது திரு: ஞானி அவர்கள் எடுத்துக் கொடுக்க மீண்டும் தொடர்ந்தார்.(சிறுகதையைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கல்...)
பாருங்க, ஒரு சிறுபெண் வெட்கம் வரும் போது பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள். அவளுக்கு தெரிந்து முகத்தில் தான் உள்ளது வெட்கம். இப்பொழுது அவளே பெரியவள் ஆகிறாள்...இப்பொழுது அவளுக்கு வெட்கம் வருகிறது, முகத்தை அதேபோல் மறைக்க முடியுமா? இப்பொழுது அவளுக்கு வெட்கம் வேறு இடத்தில் இருக்கிறது. (எல்லோரும் சிரிக்கிறார்கள்). இதுதான் ஊடக மாற்றத்தில் உள்ள சிரமம்.
நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். நான் என்னுடைய மொழியில் பேசுகிறேன். என்னுடைய மொழி சினிமா.ஒரு மொழியிலுள்ள கதையை என்னுடைய மொழிக்கு கொண்டுவரும் போது சிரமங்கள் தவிர்க்க முடியாதது.அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணிடம் காதலைதத் தெரியப்படுத்துகிறாள். அவனுக்கும் விருப்பம். ஆனால் அந்தப் பெண் ஒரு முறையிடுகிறாள். உன்னை மணந்து கொள்ள வேண்டுமெனில் "உன்னுடைய குஞ்சை அறுத்துப் போடு" என்கிறாள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்). எது ஆண்மையின் அடையாளமோ அதையே அறுத்துவிட்டு பெண்ணிடம் என்ன செய்ய... இந்தச் சிரமம் தான் சிறுகதையை சினிமாவாக எடுக்கும் போது ஏற்படுகிறது..
Here language is extremely limited.Some times we are searching for a right words. But we can't. For Ex:
நண்பருடைய தாயார் இறந்து விடுகிறார்கள். உங்களுக்கு நிறைய முறை உணவைப் பரிமாறியவர். பெற்ற பிள்ளைக்கு சமமாக உங்களையும் நடத்தியவர். இழவு வீட்டிற்குச் செல்கிறீர்கள். அந்த சோகத்தில் இருக்கும் நண்பரிடம் நீங்கள் என்ன மொழியை பேசுவீர்கள். அவரை ஆற்றுதல் படுத்த உங்களிடம் மொழியோ அல்லது வார்த்தையோ இருக்கிறதா? ஒரு தழுவலைத் தவிர.அந்தத் தழுவல் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்குச் சமம் மொழி உதிரும் இடம் இங்கு தான்.
இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம். நான் சின்னத் திரைக்காக எடுத்த கதைகளில் மாலனின் கதையும் ஒன்று. 'தப்புக் கணக்கு' என்ற சிறுகதை. மாலனின் மிகப் பெரிய விசிறி என்று சொல்லி அவருடைய எளிமை, நேர்மை, அறிவு என பல விஷயங்களைப் புகழ்ந்தார்.
மாலனின் சிறுகதை புத்தகத்தைக் கையேடு கொண்டுவந்திருந்தார். திரு ஞானி அவர்களை அந்தக் கதையைப் படிக்கச் சொன்னார். அவர் படிக்கும் போது அனைவரையும் கண்களை மூடிக் கொண்டு கதையை கேட்கச் சொன்னார். அந்த 7 பக்க கதையை படித்து முடித்ததும் அதை Script-டாக மாற்றுவதில் உள்ள சிரமத்தையும் சிரத்தையையும் எடுத்துச் சொன்னார். 7 பக்கக் கதையை 1 பக்க Script-டாக மாற்றி இருந்தார்.இங்கு திரைத் துறையில் இருந்து வந்திருந்தவர்களுக்கு முக்கியமான பல ஆலோசனைகள் வழங்கினார். அவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.
சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே போகிறார். நேரம் 7 மணியைத் தாண்டிச்செல்கிறது. அதை ஞாபகப் படுத்தவும். மாலனுடைய சிறுகதையை டிவி- ல் ஒளிபரப்பினார்கள்.T.V Color & Contrast setting -ல் பிடிவாதமாக இருந்தார். Settings சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டப் பின்னர் தான் படத்தை திரையிட அனுமதித்தார்.நீங்கள் கடையில் வாங்கும் போது இருக்கும் அதே Setting-ஐ Use பண்றீங்க. அது தப்பு. Setting சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு டிவி பாருங்கள் என்று பரிந்துரை செய்தார்.
படம் ஓடி முடிந்தது அனைவரும் கைதட்டினார்கள். இறுதியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் சினிமாவில் இறந்துகொண்டு வரும் ஒரு துறை Script Writing. எனவே நான் பேசிய இவ்வளவு மணி நேரத்தில் என்னுடைய உரையைக் கேட்டு யாரேனும் ஒரு நல்ல Script Writer பின்னாளில் வந்தால் மிகவும் மகிழ்வேன். சென்னையில் சினிமாவைப் பற்றி திறந்த மனதுடன் பேச முடியவில்லை. கேணி சந்திப்பு அந்தக் குறையை போக்கியது. நன்றி...என்று கூறி உரையை முடித்தார்.
இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நன்றியுரை கூறி கேணி சந்திப்பை நிறைவு செய்தார்.
இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:
மூன்றாவது கிணறு! - ரவிபிரகாஷ்
கேணி - இலக்கியமும் சினிமாவும்...
இலக்கியமும் சினிமாவும் - பாலு மகேந்திரா உரை
குறிப்பு: அங்கு நடந்த 3 மணிநேர உரையாடலின் சிறு குறிப்பு தான் இது. என்னோட மருமகங்களுக்கு சினிமா Interest அதிகம். அவங்க சிதம்பரம் சென்றுள்ளதால் அவர்களுக்காக நான் சென்றேன். நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் பாலு மகேந்திராவின் நீண்ட உரையைக் கேட்க முடிந்தது.
குறிப்பு: அங்கு நடந்த 3 மணிநேர உரையாடலின் சிறு குறிப்பு தான் இது. என்னோட மருமகங்களுக்கு சினிமா Interest அதிகம். அவங்க சிதம்பரம் சென்றுள்ளதால் அவர்களுக்காக நான் சென்றேன். நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் பாலு மகேந்திராவின் நீண்ட உரையைக் கேட்க முடிந்தது.
Subscribe to:
Posts (Atom)
